என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வராஜ் எம்.எல்.ஏ"

    • ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
    • அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்நிலையில், அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு புழகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சிபினுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு கைத்தறி துறை சார்பில் மாநில அளவில் மாணவர்களுக்கான (பேஷன் டிசைன் படிக்கும்) இளம் ஆடை வடிவமைப்பாளர் போட்டி நடைபெற்றது. இதில் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு ஆசர் மில் லேபர் காலனியை சேர்ந்த தம்பதியர் விஜயன், சிந்து ஆகியோரின் மகன் சிபின் கலந்துகொண்டு மாநில அளவில் 2வது பரிசு பெற்றார். இதற்கான பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலக த்தில் மாணவர் சிபினுக்கு வழங்கினார். இதையடுத்து சிபின் தனது பெற்றோருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகி திலக்ராஜ், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 22வது வட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×