search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flat"

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள் மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர்.
    • வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள்மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர். அரசுக்கும் பொது மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.

    வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள்காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்என்னிடம் வரப்பெற்ற மனுக்களை தங்களுக்கு பரிந்துரைத்தேன். அதற்குதாங்களும் ஒப்புதல் அளித்து குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அதில்ஒரு சிலர் உள்வாடகை மற்றும் போக்கியத்துக்கு விட்டு தகுதியானவர்களுக்குவீடு கிடைக்காத நிலையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு அந்த குடியிருப்பு கிடைத்திட தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    ×