search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayathar"

    • முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டத்தின் கால்நடை உதவி மருத்துவர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த 96 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 10 கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்குதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து ஆடு, மாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் ராஜ் பாபு, மற்றும் ராஜ், கால்நடை உதவியாளர்கள் செய்தி ருந்தனர்.

    • ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.

    சிதிலமடைந்திருந்த இந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.

    இதில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி

    எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப் பாளர் ராஜதுரை, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக் குமார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் செல்லையா, கோவில்பட்டி ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர, கிளை நிர்வாகிகள், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியராஜன், சுப்பு லட்சுமி, பொறியா ளர்கள் சித்ரா, செல்வாக்கை யும், செந்தில், பீர் முஹம்மது, மற்றும் பிற துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரைதொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கினார்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டார ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கயத்தாறு வட்டார வள மையத்தில் வைத்து 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

    முகாமில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மருத்துவ மனைகள் சென்று இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேவலும் மருத்தவர்கள் கமலா மாணவ-மாணவிக ளுக்கு கண்கள் பாதுகாக்கப் படும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறினார். இந்த முகாமை கயத்தாறு பேரூ ராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கியும், அங்கு பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு அன்ன தானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி யின் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிதம்பரம், வட்டார கல்வி அலுவலர் கனேசன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, உடற்கல்விஆசிரியர் சுரேஷ், பயிற்றுனர்கள் செந்தாமரை கண்ணன், மோகன் முருகன், நாயகம், ராதா டெல்லா, ஜான்சி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடு களை வட் டார வளமைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • அகிலாண்டபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்ட பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், கிளைச் செயலாளர்கள் பன்னீர்குளம் முத்துப்பாண்டி, இசக்கிதுரை, சத்திரப்பட்டி ஞானசாமி, அகிலாண்டபுரம் லெனின், சின்னத்துரை, மாடசாமி, கரிசல்குளம் ராதாகிருஷ்ணன், சாலைப்புதூர் மகாராஜன், சிவஞானபுரம் மாடசாமி மற்றும் கடம்பூர் துரை, விஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியியல் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமி, தேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர் சேக்முகமது, சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எல்.எல்.நகரில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் மற்றும் கோவில்பட்டி, நாலாட்டி ன்புதூர், எப்போதுவென்றான், கயத்தாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த செயற் பொறியாளர், காளிமுத்து, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் முனியசாமி, குருசாமி, மிக்கேல், தங்கராஜ், வேலாயு தம், உதவி மின் பொறியாளர் பாலமுருகன், கயத்தாறு இளநிலை பொறி யாளர் சுரேஷ், சுப்பையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெபமாலை நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு புனித ஆரோக்கிய அன்னை ஆலய 123-வது தேரோட்ட திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ், நெல்லை உடையார்பட்டி பங்குத்தந்தை மைக்கேல்ராஜ், கயத்தாறு பங்குதந்தை எரிக்ஜோ, உதவி பங்குத் தந்தை அன்புஜோசப் ஜெபக் குமார் மற்றும் உபதே சிகர், விழா கமிட்டி யினர் உள்பட ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெப மாலை, புனித மத்தேயு அன்பியம் நடைபெறுகிறது.

    3-ம் நாளான நாளை தூய சவேரியார் கல்லூரி நவீன், 4-ம் நாள் சாந்திநகர் ஜீப்லி நிலைய ஜெமல்ஸ் ஜேம்ஸ், 5-ம்நாள் மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் சேவியர் அருள்ராயன், 6-ம் நாள் சேந்தமரம் பங்குதந்தை இமானுவேல் ஜெகன்ராஜா, 7-ம்நாள் சிதம்பராபுரம் பங்கு தந்தை அந்தோணிராஜ், கழுகுமலை பங்கு தந்தை ஆட்டோ, 8-ம் நாள் கயத்தாறு பங்கு தந்தை எரிக்ஜோ, 9-ம்நாள் மறைமாவட்ட செயலர் மற்றும் பணிக்குழு அருட்தந்தை லூர்து மரஇயசஉதன், 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெய பாலன் ஆகியோர் தலை மையில் திருப்பலி நடை பெறுகிறது.

    இதனை தொடர்ந்து 10-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு நற்கருனை, ஆசீர், கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • ராஜாராம் தனது உறவினர் வீடான கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரெங்காழ்வார் என்பவரது வீட்டிற்கு வந்தார்.
    • இந்நிலையில் உறவினருக்கு சொந்தமான வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.

    கயத்தாறு:

    கோவை சிறுவாணி அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 53). திருமண புரோக்கர். இவர் தனது உறவினர் வீடான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரெங்காழ்வார் என்பவரது வீட்டிற்கு வந்தார்.

    இந்நிலையில் உறவினருக்கு சொந்தமான வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இன்று காலை உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் இறந்த நிலையில் ராஜாராம் மிதந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்து ராஜாராம் பலியானது தெரியவந்தது. 

    • கடந்த 41 நாட்கள் சிறப்பு பூஜையுடன் பல்வேறு யாகங்கள், வேள்விகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் ராஜகணபதி பிள்ளை யார் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு பூமி பூஜையுடன் தொடங்கி கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 41 நாட்கள் சிறப்பு பூஜையுடன் பல்வேறு யாகங்கள், வேல்விகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வ குமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் நீலகண்டன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • குப்பனாபுரம் உள்ளிட்ட ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி , தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
    • நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் துணை வேளண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி., தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

    புதிய கட்டிடம் திறப்பு

    இந்நிலையில் நேற்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து குப்பனாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், கொப்பம்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு என்ன தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    22 பேருக்கு இலவச வீட்டுமனை

    நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், முன்னாள் கடம்பூர் பேரூராட்சிமன்ற தலைவர் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர்கள் ராஜதுரை, விஸ்வநாத் ராஜா, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர்கள் கயத்தாறு சுரேஷ்கண்ணன், கடம்பூர் பாலகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கனகராஜ், துணை தலைவர் சுப்புராஜ், பேரூராட்சிமன்ற கவுன்சிலர்கள் நயினார், செல்வகுமார், மாரீஸ்வரி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வக்கீல் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுசாமி, கடம்பூர் வருவாய் ஆய்வா ளர் பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தையா கடந்த மாதம் 16-ந்தேதி சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தையா. இவர் வடக்கு இலந்தை குளம் பஞ்சாயத்து துணை தலைவர் இருந்து வந்தார்.

    விபத்து

    இந்நிலையில் இவர் கடந்த கயத்தாறில் இருந்து வடக்கு இலந்தைகுளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிள் சென்றார். அவர் சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சென்று அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தை யாவுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகன்களும் உள்ளனர்.

    • பணிக்கர்குளம் கிராமத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து கலையரங்கம் அமைய உள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியினை ஊர் பொதுமக்கள் முன்பு பார்வையிட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது.

    கயத்தாறு:

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், பணிக்கர்குளம் கிராமத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை தாங்கினார். இதில் கயத்தாறு தி.மு.க. மத்திய ஒன்றிய அவைத் தலைவர் துரைப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து நாகலாபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலையரங்கம் அமைய உள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியினை ஊர் பொதுமக்கள் முன்பு பார்வையிட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாபுரம் நாட்டாமை காளிபாண்டியன், தி.மு.க. கிளை செயலாளர் சந்தனமாரி, பணிக்கர்குளம் பஞ்சாயத்து கிளார்க் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ×