search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Office"

    • அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததிபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது.
    • கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததி புரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.

    இதுகுறித்து பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து முறையிட்டார்.

    அதன்பேரில் டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு உடனடி யாக அங்கன்வாடி மையத்துக்கு கழிப்பிட வசதி செய்து தரும்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அன்றைய தினமே கழிப்பிடம் கட்டுவதற்காக அங்கன்வாடி மையத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் கழிப்பிடம் கட்டும்பணி தொடங்கப்பட வில்லை.

    இதையடுத்து பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவல கத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இல்லை. இதை தொடர்ந்து அங்கிருந்த அதிகாரியிடம் கழிப்பிடம் கட்டாதது குறித்து பா.ஜனதாவினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் சரியான விளக்கத்தை அளிக்காததால் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

    இதன்பின்னர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செல்போனில் பா.ஜனதா தலைவர் செல்வகுமாரை தொடர்பு கொண்டார்.

    அப்போது உடனடியாக அங்கன் வாடிக்கு கழிப்பிடம் கட்டும் பணியை தொடங்குவதாக உறுதி யளித்தார். இதனையேற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

    • வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு ரூ. 23.56 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவரும், மானூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தி.மு.க. செயலாளருமான மகாராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் மாரி வண்ணமுத்து, மாரியப்பன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோ ட்டை செல்லத்து ரை, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, பாப்பாக்குடி ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனைக்குட்டி பாண்டியன், சொர்ணா, பாலசுப்பிர மணியன், முப்புடாதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி, சுப்புலட்சுமி, காசி, முபின், முத்துமாரி, சுபாவாணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவன்பாண்டியன், அருணாசல பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமாக நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீலநிற வேலை அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கீழப்பாவூர் ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
    • ஞானதிரவியம் எம்.பி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர்.

    ஆலங்குளம்:

    கீழப்பாவூர் ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், ஊராட்சி துணைத்தலைவர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கை.முருகன் வரவேற்று பேசினார்.

    ஞானதிரவியம் எம்.பி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர். விழாவில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, வி.ஏ.ஓ. வேல்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மூக்கையா நன்றி கூறினார்.

    • கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
    • கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு :

    கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

    இந்நிலையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட்டு அனைதலையூர், மறக்குடி மற்றும் நேதாஜி நகரில் வாழும் கிராம மக்களுக்கு கூட்டுகுடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் ஊர் நாட்டாண்மைகள் சின்னத்துரை, லெட்சு மணன், மகாராஜன் ஆகியோர் தலைமையில் முற்று கையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கங்கை கொண்டான் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 2 நாட்களுக்குள் உடனடியாக புதிய பைப் லைன் வைத்து கொடுக்கப்படும் என்றனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு

    இதற்கிைடயே கங்கை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங் களான அலங்காரப்பேரி, மடத்துப்பட்டி, ராஜபதி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தான் குடிதண்ணீர் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்கும் போது அவர்கள் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே நிரந்தரமாக தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌.
    • சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருந்து வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌. அதன் பேரில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். பின்னர் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் சுற்றி சுற்றுச்சுவர் இருந்து வந்த நிலையில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌. அப்போது சுற்றுச்சுவர் இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மாற்று வழி மூலம் செல்வதற்கு அதிகாரிகள் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது.
    • கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

    ஈரோடு:

    உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது. அதற்காக, ஒவ்வொரு தினமும், குறிப்பிட்ட சேவையை ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.

    இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    முதல் நாளான கடந்த 9 -ந் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நேற்று வலுவூட்டல் தினமும், இன்று தபால் தலை தினமும், நாளை தபால் தினமும், 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமும் கடைபிடி க்கப்படுகிறது.

    நேற்று அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மொட க்குறிச்சி அலுவலகத்தில் அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகரபாபு தலைமையில் பேரணி நடந்தது.

    இன்று தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, ஈரோடு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளிடம் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக வினாடி, வினா நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தபால் தலை சேகரிப்பு கணக்குகளை தொடங்கலாம்.

    இவ்வாரத்தில், மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தபால் நிலையங்கள், தபால்காரர்களிடம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம்.

    கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. பெரு ந்துறை கருக்கம்பாளையம் சமுதாய கூடத்தில் நாளை முதல் வரும் 13-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

    தாமரைபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 13-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. கோபிசெட்டிபாளையம் களிங்கியத்தில் அஞ்சல் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் வரும் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பண்ருட்டி ஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது.
    • அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தினுள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு இருந்த கொடி கம்பம், அறை கதவு, பூட்டு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். தகவல்அறிந்ததும்அங்கு விரைந்து சென்ற பஞ்சாயத்து தலைவர் முத்துலிங்கம், துணைத் தலைவர் ராமசாமி ஆகி யோர் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடு த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரா ட்சி அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்திய தெற்கு மேம்பாம்பட்டு கிராம த்தைச் சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • திட்டக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    • திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.

    கடலூர்:  திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.  இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 7-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல் 8-ந் தேதியே ஆக்கிரமிப்பை அகற்ற படும் என உறுதியளித்தார். ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 12 ம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். இதை யேற்று போராட்டக் காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
    • போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி அருகில் உள்ள புளியராஜக்காபட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, கழிவு நீர் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    நாளை இப்பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி தருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று வரை எந்தவித பணிகளும் நடக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து ஊராட்சி தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வெளியூரில் வசிப்பதாக கூறி உள்ளார். இருந்தபோதும் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியூரில் இருப்பதாக கூறிய ஊராட்சி தலைவர் அங்கு வந்ததால் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவி–டுமாறு அறிவுறுத்தினர்.

    கள்ளிக்குடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வெள்ளாகுளம் பஞ்சாயத்து சுந்தரங்குண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்யும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் பணிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து போரா ட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:-
     
    தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி புரிபவர்களுக்கு பழைய அட்டையை புதுப்பித்து புதிய அட்டை வழங்கு வதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சுந்தரங் குண்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்  களுக்கான பதிவு புதுப் பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதில் பழைய அட்டைக்கு பதிலாக புதிய அட்டை வழங்க 200 ரூபாய் வழங்க வேண்டு மெனவும், புதிதாக பணியில் சேர்பவர்கள் அட்டைக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும்  நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் பணி நடைபெறும் நாட்களில் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் 5 ரூபாய் கொடுத்து விட்டுத்தான் வேலையை பார்க்க வேண்டும் என கூறி ஒவ்வொருவரிடமும்  ஐந்து ரூபாய்க்கு பெறுகிறார்கள்.  

    இதன் மூலம் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் செல்கிறது. இதற்கு ஊராட்சி செயலாளர் தான் காரணம்.

    அதோடு ஊராட்சி செய லாளர் மற்றும் பொறுப்பா ளர்கள் 100 நாள் வேலை செய்வோரின் பணிகளை குறை செல்வதோடு, பெண்கள் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் விசாரண நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
     
    போராட்டம் தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை கைவிடப்பட்டது.
    வீடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு எதிர்ப்பு தெரிவித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தபால் தெரு, மேட்டுத்தெரு மற்றும் காந்தி நகர் உள்ளது. இப்பகுதிகளில் வரி விதிப்பு சீராய்வு என்ற பெயரில் வீட்டுவரி அதிக அளவில் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்பகுதியில் பொதுமக்களின் கருத்தை கேட்காமல் குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலை, மாலை என இரு வேளைகளில் வழங்கப்பட்ட குடிநீரை தற்போது காலை மட்டும் 1 மணி நேரத்திற்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

    இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வேலு தலைமை தாங்கினார். நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சிவா, விஜயலட்சுமி, பொது மக்கள் பிரதிநிதிகள் மோகனவேல், பலராமன், பிரமானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின்போது பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறி அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் காந்தி நகரில் தனியார் பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சிறு பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்பு சுவர்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை அமைத்து தரவில்லை. இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பேரூராட்சி அதிகாரிகள் நரேந்திரன், கருணாநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    வீடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனை குறித்து மீண்டும் முறையான ஆய்வு நடத்தி பொதுமக்களை பாதிக்காத அளவில் உரிய வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×