search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public siege"

    • குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    குடிநீர் வினியோகம் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22-வது வார்டு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார்.

    -இந்தநிலையில் 22-வது வார்டு பகுதியான பெருமாள் லேஅவுட், சாமப்பா லே அவுட், சுமா லேஅவுட் போன்ற பகுதியில் கடந்த 6 மாதங்களாகவே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாமல் மிகவும் காலதாமதமாகவும், மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் அருகில் உள்ள வார்டு பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதாக குற்றம்சாட்டி 22-வது வார்டு மக்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

    -2-வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    -தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

    அப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிச்சயமாக 3 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    பொன்னேரியில் மின்வெட்டால் அவதி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், தடப்பெரும்பாக்கம், வேண்பாக்கம், நாலூர், இலவம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு பகல் என சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 10 மணிக்கு பொன்னேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் பொன்னேரி திருவொற்றியூர் சாலை வேண்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது என உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    போராட்டம் நடத்திய பிறகு உடனே மின்சாரம் வழங்கப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் 1 மணி நேரம் வழக்கம் போல மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகி அனைத்து கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

    மின்சாரம் இல்லாத நேரத்தில் வேண்பாக்கம் துணைமின் நிலையத்துக்கு போன்செய்தால் எடுப்பதில்லை. போனை எடுத்து கீழே வைத்து விடுகின்றனர். அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை.

    மின்சாரம் இல்லாத நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன அதை சரியாக பயன்படுத் துவதில்லை எனவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த வீரக்குப்பம் அருந்ததியர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சான்றிதழ் கேட்டு திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு செய்து இருந்தனர்.

    ஆனால் அவர்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ் கொடுக்காமல் கோரிக்கை மனுவை அதிகாரி தள்ளுபடி செய்ததாக தெரிகிறது.

    இதுபற்றி சாதி சான்றிதழ் கேட்டவர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் இன்று காலை திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கேட்டு 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பாஞ்சாயத்து கே.ஏ.நகர் தர்கா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 

    கடந்த மூன்று மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என பி.டி.ஓ. மற்றும் பஞ்சாயத்து கிளர்க் வேல்முருகன் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றால் அவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று சண்டையிடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்க சென்றபோது ஏற்பட்ட சண்டையில் இரண்டு பெண்களுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    எனவே, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். அப்போது பஞ்சாயத்து கிளர்க் நேரில் வந்து தண்ணீர் பிரச்சனையை உடனே சரி செய்வதாக கூறியதையடுத்து, முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆண்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கே.காமாட்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குன்னூர் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழ்குழாய் கிணறு அமைத்து குடி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த 1 ஆண்டாக குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆண்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசபேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாளை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றால் பாராளுமன்ற தேர்லை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.

    மாதவரம் அருகே நிலத்தடி நீர் திருட்டை தடுக்ககோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதவரம்:

    மாதவரம், கண்ணம்பாளையம். விளங்காடுபாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது.

    இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து நிலத்தடி நீரை திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    எனினும் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் திருடி விற்கப்படும் சம்பவம் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாதவரம் 3-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதவரம் போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக தண்ணீர் திருட்டை நிறுத்த ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews

    புதுக்கோட்டை தைலாநகரில் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டுவீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை மரங்கள் போன்ற மரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடி தைலாநகர் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் நேற்று தைலாநகர் பகுதிக்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி அம்பிகாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தைலாநகர் பள்ளியில் நிவாரண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. நான் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு செய்துதான் நிவாரண பொருட்களை வழங்குவேன் என கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வீடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு எதிர்ப்பு தெரிவித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தபால் தெரு, மேட்டுத்தெரு மற்றும் காந்தி நகர் உள்ளது. இப்பகுதிகளில் வரி விதிப்பு சீராய்வு என்ற பெயரில் வீட்டுவரி அதிக அளவில் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்பகுதியில் பொதுமக்களின் கருத்தை கேட்காமல் குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலை, மாலை என இரு வேளைகளில் வழங்கப்பட்ட குடிநீரை தற்போது காலை மட்டும் 1 மணி நேரத்திற்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

    இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வேலு தலைமை தாங்கினார். நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சிவா, விஜயலட்சுமி, பொது மக்கள் பிரதிநிதிகள் மோகனவேல், பலராமன், பிரமானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின்போது பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறி அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் காந்தி நகரில் தனியார் பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சிறு பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்பு சுவர்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை அமைத்து தரவில்லை. இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பேரூராட்சி அதிகாரிகள் நரேந்திரன், கருணாநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    வீடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனை குறித்து மீண்டும் முறையான ஆய்வு நடத்தி பொதுமக்களை பாதிக்காத அளவில் உரிய வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சேலத்தில் இன்று காலை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி, இடங்கணசாலை, தூதனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். அங்கு மேட்டூர் குடிநீர் கிடைத்து வந்தது. எங்கள் ஊருக்கு முன்பகுதியில் உள்ளவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை மெயின் குழாயில் இருந்து உறிஞ்சுவதால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

    மேலும் பொதுகிணற்றில் டேங்க் மூலம் குடிநீர் பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அந்த கிணற்றை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் மென பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தோம்.

    ஆனால் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த 6 மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் காலிகுடங்களுடம் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து டவுன் போலீசார் சுமூகமாக பேச்சுவார்தை நடத்தி மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்கரபாண்டியபுரம் பகுதியில் இடியும் நிலையில் உள்ள சுகாதார வளாகத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதிக்குட்பட்ட சங்கரபாண்டியபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்களுக்காக 4 சுகாதார வளாகங்கள் கட்டி தரப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில் நாளடைவில் இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றாக சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இக்கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கழிப்பறைகள் கட்டி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாத்தூரான் கூறியதாவது:-

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெண்கள் பொதுமக்களில் பெரும்பாலானோர் பொது கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வந்தனர்.தற்போது 4 கட்டிடங்கள் இருந்தாலும் அது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சத்தை புதிய கழிப்பறை கட்டும் திட்டத்தில் வழங்கி உள்ளோம்.

    இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை, திறந்த வெளியை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஓரிரு வாரங்களுக்குள் கழிப்பறை கட்டிடங்களில் ஆழ்குழாய் அமைத்தும், மறு சீரமைப்பு செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய கழிப்பறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    குடியாத்தம் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தையொட்டி உள்ள பாலாற்றில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க மணல் குவாரி அமைக்கப்பட்டது.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெகு தூரத்தில் இருந்தும் மாட்டுவண்டிகள் வர தொடங்கின. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்கின்றனர்.

    இதனால் பாலாறு சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு விவசாயம் முற்றிலும் நாசமாகிறது.

    சுடுகாட்டை அழித்தும் மணல் சுரண்டப் பட்டுவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த அக்டோபர் மாதம் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகள் மணல்குவாரியை மூட நடவடடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

    இந்நிலையில் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திர மடைந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மீண்டும் பாலாற்றில் குவிந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு மணலை ஆள்ளவிடாமல் போராட்டம் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே போலிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் டென்டர் விடப்பட்டது. அதன்படி ஏரியில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டது. 3 அடிக்கு மட்டுமே மணல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் சுமார் 15 அடிவரை பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டு உள்ளதாக போலிவாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் மணல் எடுத்த பள்ளத்துக்குள் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 15 அடிக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் 35 அடியில் தண்ணீர் வந்துவிடும்.

    ஆனால் தற்போது 80 அடியில்தான் தண்ணீர் வருகிறது என்றனர். தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ×