search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste Certificate"

    • 500-க்குமேற்ப்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
    • ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 171மலை கிராமங்களில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலையில் 8ஆயித்துக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உயர்நிலை, மேல்நிலை, மற்றும் கல்லூரிக்கல்வி பயில சுமார் 500-க்குமேற்ப்பட்டோர் மலைவாழ் சாதி சான்றிதழ் கேட்டு கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உயர்கல்வி பயில முடியாமல் அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் அவதிஅடைந்துள்ளனர்.

    முன்பெல்லாம் சாதி சான்று கேட்டு விண்ண ப்பித்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் துறையி னர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தும் இதுவரை நேரடி விசாரணைக்கு அல்லது ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உதவி கலெக்டர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் 145 நரிக்குறவர்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது செய்யாறு சப் கலெக்டர் ஆர். அனாமிகா அரும்பருத்தி கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக நரிக்குறவர்களிடம் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அரும்பருத்தி நரிக்குறவர் காலணியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 145 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கலைமதி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
    • வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.

    திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

    பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

    என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-

    பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.

    வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.

    • முதன்முறையாக காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்முறையாக காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் பழங்குடியினர் பிரிவில் காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி சார் ஆட்சியில் அலுவலகத்தில் 17 நபர்களுக்கு காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ, முருகேசன் காணிக்கர் சாதி சான்றிதழை வழங்கினார். இதில் பரமக்குடி உதவி ஆட்சியாளர் அப்தாப் ரசூல், பரமக்குடி தாசில்தார் ரவி, கமுதி தாசில்தார் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.

    இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் சாமியான பந்தல் அமைத்து அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர்.
    • போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழங்குடி, இருளர் உள்ளிட்ட அனைத்து நலிந்த பிரிவினருக்கும் விரைவில் ஜாதி சான்றிதழ், மனைப்பட்டா, நல வாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சாதி சான்றிதழுக்கு இணையவழி அல்லாமல் நேரடியாக மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர் பாபு, தலைவர் சிவகாமி மற்றும் நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று திட்டமிட்டபடி சென்னைக்கு நடை பயணமாக செல்வோம் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, சட்ட ஆலோசகர் வக்கீல் திருமேனி, தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நடைபயணமாக செல்வதற்கு தயாரானார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பெண் மயக்கம் அடைந்து சாலையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு குடிநீர் வழங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர். இதில் 30 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது.
    • எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் சாதி சான்றிதழ் வேண்டி தமிழக ஆதியன் பழங்கு–டியின மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வீரைய்யன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 35 ஆதியன் பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடை படுகிறது.

    பட்டுகோட்டை மேல ஓட்டங்காடுமற்றும் துறைவிக்காடு, சுக்கிர ன்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவ–ர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க–ப்பட்டுள்ளது. இது போல் எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தடையை மீறி தடுப்புச்சுவரை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • சம்பந்தப்பட்ட தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    தென்காசி:

    புளியங்குடி பகுதியை சேர்ந்த இந்து குறவர் சமுதாய தலைவர் தங்கவேலு தலைமையில் ஊர் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி தடுப்புச்சுவரை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரிடம் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    புளியங்குடி பகுதியை சேர்ந்த எங்கள் சாதி அல்லாதவர்கள் சிலர் இந்து குறவர் சமுதாயத்தினர் என சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். இதனால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய இட ஒதுக்கீடு, உதவித்தொகை பாதிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர்.
    • தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வசித்து வரும் இவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறைக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    இதையடுத்து பூந்தமல்லி அம்மான் நகர் பகுதியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர். மேலும் தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காஞ்சனா சுதாகர் பேசும்போது, நரிக்குறவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் நரிக்குறவ மாணவிகள் வீட்டுக்கு சென்று உணவு அருந்தியது குறித்தும் பேசினார்.

    இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், வழக்கறிஞர் மாலினி ஆகியோர் நரிக்குறவ இன மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், கல்வியினால் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் நரிக்குறவ மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த வீரக்குப்பம் அருந்ததியர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சான்றிதழ் கேட்டு திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு செய்து இருந்தனர்.

    ஆனால் அவர்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ் கொடுக்காமல் கோரிக்கை மனுவை அதிகாரி தள்ளுபடி செய்ததாக தெரிகிறது.

    இதுபற்றி சாதி சான்றிதழ் கேட்டவர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் இன்று காலை திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
    ஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் உடனே வழங்க கோரி வேம்பேடு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட வெம்பேடு பகுதியில் 45 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்று இல்லாததால் தமிழக மற்றும் மத்திய அரசுகளின் சலுகைகள் பெற முடியவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு சாதி சான்று வழங்ககோரி இப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோட்டாட்சியர் ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு இது குறித்து பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் ஊத்துக்கோட்டை தாசில்தார் சாதி சான்று வழங்காமல் விசாரணை என்ற பெயரில் அலைக் கழிக்கிறார் என்று வேம்பேடு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை கண்டித்தும், சாதி சான்று உடனே வழங்க கோரியும் வேம்பேடு பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் பூண்டி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசு, தலைவர் சின்னதுரை, ஒன்றிய துணைத் தலைவர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
    கீழ்பென்னாத்தூர்:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட்ட காட்டுமலையனூர் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உயர் நிலைப் பள்ளி திறப்புவிழா காட்டுமலையனூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, கலசபாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

    அதன்படி, கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கையான கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.
    ×