சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு

விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு.
சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு
Published on

சாதிச்சான்றிதழ்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சாதிச் சான்றிதழ்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

மேலும், பட்டியலின, பழங்குடியினர் சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு அமைக்க நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளது.

குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com