search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector office"

    • போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
    • தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).

    இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.

    • சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிருப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.
    • எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஓைட கட்டும் பணி

    பாளை தாலுகா சிவந்தி பட்டி அம்பேத்கர் தெரு பொதுமக்கள் ஊர் தலைவர் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிரு ப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.

    சமீபத்தில் இங்கு ஓடை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு சுமார் 200 அடி நீளம் கட்டப்பட்டுள்ளது. அந்த பணியும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

    இதனால் எங்களது குடியிருப்பில் இருந்து வெளி யேறும் மழை நீர், கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேறு வதற்கு வழி இல்லாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    குவாரி உரிமம்

    சங்கர் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து 2-வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாதனூத்து கிராமத்தில் 350- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குவாரி உரிமம் பெற்ற ஒருவர் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிமருந்து பயன்படுத்தி அதிக ஒலி சத்தத்துடன் வெடி போடுகின்றனர்.

    தாதனூத்து ஊரின் விவசாய நிலம் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிதாக ஒரு குவாரி உரிமம் பெற்று செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் அளவுக்கு புதிதாக எந்த குவாரிக்கும் உரிமம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

    தீபாவளி போனஸ்

    தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேர வை மாவட்ட நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் பாக்கி யம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எச்.எம்.எஸ். கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தனி தனி வாரியமாக 18 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் தொழிலாளர்கள் பதிவு செய்திட தொடங்கி தற்போது 40 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு எளிய முறையில் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    தாசில்தார் மீது புகார்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மானூர் வட்டம், மானூர் யூனியன் ஆகியவற்றின் அலுவலகத்தின் கட்டி டங்கள் எல்லாம் மானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வருகிறது. மானூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 43 ஊராட்சிகளும், 80-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அரசின் சலுகைகள் உட்பட அனைத்தையும் பெறுவதற்கு மானூர் ஊராட்சி பகுதிக்கு தான் வரவேண்டிய நிலை இருக்கிறது.மானூரில் பொது கட்டிடங்கள் அமைக்க இடம் கேட்கும் போது யூனியன் அதிகாரிகள் இங்கு பொதுவான இடம் இல்லை என்று கூறி சான்று வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதிக்கு கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை கட்ட முடியாத நிலை இருக்கிறது.

    எனவே இது தொடர்பாக பட்டா குறைதீர்க்கும் முகாமில் சிலுவை முத்து என்பவர் கேள்வி எழுப்பிய போது மானூர் தாசில்தார் முருகன் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே யூனியன் அதிகாரிகள் மீதும் தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    காங்கிரஸ் மனு

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை தாலுகா மணிமுத்தாறு பேரூராட்சி க்குட்பட்ட மணிமுத்தாறு அருவியின் மேல் தலையணை யிலிருந்து மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து வரை தார் சாலை மிகவும் மோசமாகவும், பயணிப்பவருக்கு ஆபத்தான நிலையிலும் உள்ளது.

    பேரூராட்சியின் எஸ்டேட் பகுதியில் 5 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2000 தோட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்த சாலை மோசமாக இருப்பதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நெல்லை மாவட்ட இளைஞர் மற்றும் பெண்க ளுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்க ப்பட்ட கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களை நல்ல முறையில் செயல்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    • பெற்றோர் சொத்தில் மும்தாஜ் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
    • மும்தாஜ் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். மும்தாஜின் பெற்றோர் வீடு அம்பையில் உள்ளது.

    மும்தாஜின் பெற்றோர் சொத்தில் அவர் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த சொத்தை பங்கு வைப்பது தொடர்பாக ஏற்கனவே மும்தாஜ் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் அங்குள்ள கூட்டரங்கில் மனு வாங்கிக் கொண்டிருக்கும்போது வந்த மும்தாஜ் திடீரென ரிப்பனால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து ரிப்பனை பிடுங்கினர். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலாயுதபுர கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.
    • அதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 6மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் முறையாக வழங்கிடகோரி மனு அளித்தனர். அப்போது ஊராட்சித் தலைவர், யூனியன் தலைவர் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

    மேலும் கடந்த மாதம் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது சாத்தான்குளம் போலீசார் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில் 6மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் அவதி அடைந்துள்ளோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.
    • கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் கரையிருப்பு அய்யாசாமி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாணவன் மீது தாக்குதல்

    எனது குழந்தைகள் தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தை களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும், தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டியும் வருகின்றனர்.

    கடந்த 8-ந்தேதி எனது மகனை அந்த பள்ளி ஆசிரியர் புத்தகத்தை கொண்டு தாக்கியதில் அவனது காதில் வலி ஏற்பட்டு காயம் இருந்து வருகிறது. இது தொடர்பாக எனது மகன் எங்களிடம் வந்து தெரிவித்த போது நாங்கள் தட்டி கேட்கின்றோம் என்றோம்.

    அப்போது அவன், தட்டிக் கேட்டால் ஆசிரியர்கள் பெயில் ஆக்கி விடுவார்கள் என்று மிரட்டியதாக தெரிவித்தான். விசாரித்து பார்த்ததில் அந்த பள்ளியில் ஏராள மான மாணவர்களை ஆசிரியர்கள் இதுபோன்று நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறி இருந்தனர்.

    மணல் திருட்டு

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற ங்களுக்கு உட்பட்ட கிராம ங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.
    • நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    நெல்லை:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் இன்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் லதா தலைமை தாங்கினார்.

    ஜெயந்தி, சந்திரா, சமாதானம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமி சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேலையில்லா திண்டாட்டத்தின் காரண மாக வீட்டு வாடகை கூட கொடுக்க வழி இல்லாமல் ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.

    இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான பெண்கள் கந்து வட்டியில் சிக்கி தவித்து வருகின்றனர். அதனை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன், மாவட்ட துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் அமுதா, மாவட்ட குழு உறுப்பினர் மரகதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    மானூர் யூனியன் பல்லிக் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமடை கிராம மக்கள், மாவீரன் சுந்தரலிங்க னார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பபாண்டி யன் தலைமையில் திரண்டு வந்தனர்.

    திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக வளா கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    தொடர்ந்து மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    பல்லிக்கோட்டை பஞ்சா யத்துக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலையின் மூலமாக பிழைப்பு நடத்து கின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படு வதில்லை. அதிகபட்சம் 40 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதிலும் சம்பளமும் முறை யாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.

    கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

    இது தொடர்பாக மானூர் யூனியன் அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.
    • பிரச்சனை காரணமாக தனித்தாசில்தாரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த மனோஜ் முனியன் என்பவர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளார். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக தனித் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரை சஸ்பெண்டு செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமையில் ஊழியர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் எங்கள் பகுதி வறட்சி பகுதியாக அறிவிக்கப்படவில்லை.
    • வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் வன்னிகோனேந்தல் வருவாய் குறுவட்ட விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 9 ஊராட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வரை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த ஊராட்சிகள் மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்டு இருந்தது. இந்த பகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது.

    அந்த நேரத்தில் எங்களுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் 2019-க்கு பிறகு மானூர் யூனியனுடன் எங்கள் பகுதி இணைக்கப்பட்டதால் கடுமையான வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் வறட்சி பகுதியாக எங்கள் பகுதி அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வறட்சி நிவாரணமோ, பயிர் காப்பீடு தொகையோ வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம்.

    தற்போது தமிழக அரசால் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 9 கிராமங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். ஆனால் இன்று மிக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • சுப்பையா தனது நிலத்தை அளக்க நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.
    • சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க சுப்பையா அனுமதி கேட்டிருந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்ற சுப்பையா. விவசாயி. இவர் தனது நிலத்தை அளக்க வேண்டும் எனக்கூறி நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.

    ஆனால் 10 மாதங்களை கடந்தும் நிலத்தை அளக்க சர்வேயர் யாரும் வராததால் தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். ஆனாலும் அதன்பின்னரும் தனக்கான இடத்தை அளவீடு செய்ய வராமலும், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்காமலும் இருப்பதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சுப்பையா திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    உடனடியாக சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நில அளவை பிரிவு அதிகாரிகள் நேரில் வந்து அவரிடம் அளக்க வேண்டிய நிலங்களை உரிய முறையில் அளந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார்.
    • வறட்சியான காலங்களில் வடக்கு பத்தினிப்பாறை கிராம பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர்.

    காலிக்குடங்களுடன் திரண்ட மக்கள்

    மானூர் யூனியன் பல்லிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட திருத்து கிராமத்தை சுமார் 500 பேர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் வாசல் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

    பல்லிக்கோட்டை பஞ்சாத்தில் அலவந்தான்கும், பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து ஆகிய 3 கிராமங்கள் உள்ளது. இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2004-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் 3 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார். இதனால் மற்ற 2 கிராமத்தினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முனைஞ்சிப்பட்டி இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து வடக்கு பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 2 சமூகத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வறட்சியான காலங்களில் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதேபோல் பைப்லைன் அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே இரண்டு சமூகத்தினருக்கும் தனித்தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர். 

    • பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
    • கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்களை வீசியும், அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    நெல்லை,ஜூலை.31-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் தலைமையில் வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மீன் விற்பனை கூடம்

    பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. அதனை தகுதியுள்ள மீனவர்களுக்கு வழங்கிட வேண்டும். தகுதி இல்லாத நபருக்கு வழங்கியுள்ளனர். அதனை ரத்து செய்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

    இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டு வரும் நெல்லை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் எங்களுடைய மீனவர்கள் அடையாள அட்டை மற்றும் மீனவர்கள் நலவாரிய அட்டையை திரும்ப ஒப்ப டைப்பதை தவிர வேறு வழியில்லை.

    கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகிற 7-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் மீனவர் நல வாரிய அட்டையை ஒப்படைக்க உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கும்பல் தாக்குதல்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுரேந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ் பாண்டியன், பாக்யராஜ், ராஜா, சுரேஷ் குடும்பனார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று முன்தினம் நள்ளிரவில் கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஸ்ரீவைகுண்டம், தாழையூத்து மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கற்களை வீசியும், கடைகளின் மீதும் அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவை ஒட்டி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை இழிவு படுத்தும் வகையிலும், சமுதாய தலைவர்களை இழிவு படுத்தும் வகையிலும் அவர்கள் செயல் பட்டுள்ளனர்.

    இந்த செயல்களுக்கான வீடியோ பதிவுகள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    ×