search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trains"

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    திருச்செந்தூரில் நடை பெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் -தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

    திருச்செந்தூர்-தாம்ப ரம் சிறப்பு ரெயில் கூடுத லாக ஆறுமுகநேரி, நாச ரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர் சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்
    • விருதுநகர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி மற்றும் போலீசார் விருது நகர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில், ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். பயணிகள் எடுத்து வந்த பைகளில் பட்டாசுகள் உள்ளதா? என தீவிர சோதனை செய்து பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது பயணிகள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் பட்டாசுகள் கொண்டு சென்ற மதுரையை சேர்ந்த மோகன்குமார், பிரவீன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு, ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்து சிவகாசி, விருதுநகர் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். ரெயில்களி லும் பயணிகள் யாரும் பட்டாசு எடுத்து வந்துள்ளனரா? என சோதனை செய்தனர்.

    பொதுமக்கள் யாரும் ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் எச்சரித்துள்ளார்.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோ கிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட வெளியூரில் வேலை பார்க்கும் பணியாளர்கள், வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சொந்த ஊரான பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு வருவது வழக்கம்.

    எனவே, பயணிகள் வந்து செல்ல ஏதுவாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழித்தடத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.

    தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரெயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பி னருமான ராஜா எம்.எல்.ஏ. சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறையும் நெருங்கி வருகின்றன. எனவே அந்த நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் தென்காசி வழியாக அக்டோபர் 24, 25 மற்றும் நவம்பர் 13,14, (திங்கள், செவ்வாய் )விடப்பட்டால் கூட்ட நெரிசலைக் குறைக்கும். மேலும் விஜயதசமி மற்றும் தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் விஜயதசமி மற்றும் தீபாவளிக்கு தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தென் தமிழகத்தில் இருந்து காத்திருப்புப் பட்டியல்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளுக்கு பெரிதும் உதவும், எனவே இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சேலம்- ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 12.12 மணிக்கு வந்து கொண்டிருந்த ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.02 மணிக்கு வந்து செல்லும். அதுேபால் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த கோவை-சில்ஷார் வாராந்திர ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.25 மணிக்கு வந்து செல்லும். இதே போல் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த எர்ணாகுளம்- பாட்னா ரெயில் (வாரம் 2 முறை வரும் ரெயில்) வருகிற 21-ந்தேதி 12.12 மணிக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்து ள்ளது.

    • விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.

    புதுச்சேரி:

    திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகனுக்கு புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் திருப்பதி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ரெயில் பயணிகள் மற்றும் மக்களின் வசதிக்காக ரெயில்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்துக்கு மதியம் 3.50 மணிக்கு வருகிறது.

    புதுவையிலிருந்து 2.55 மணிக்கு திருப்பதி ரெயிலில் விழுப்புரம் செல்லும் பயணிகள் பல நேரங்களில் வைகை ரெயிலை தவறவிடுகின்றனர். எனவே திருப்பதி ரெயிலை 2.30 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

    குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரெயில் விழுப்புரத்துக்கு 5.40 மணிக்கு வருகறது. இந்த ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.

    எனவே புதுவை ரெயிலை 6.15 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்தில் 4, 5-வது நடைமேடைகளில் கோச் பொசிஷன் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • பேராவூரணியில் இரவு ஒரு நிமிடம் நின்று சென்றது.
    • அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, துணைச் செயலாளர் கௌதமன், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06004) தாம்பரத்திற்கு நேற்று மாலை 3.40 மணியளவில் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.

    இந்த ரயில் பேராவூரணியில் இரவு.9.30மணிக்கு 1 நிமிடம் நின்று சென்றது. இதில் 35 பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். 23 பயணிகள் முன்பதிவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி ராஜேந்திரன் கூறியதாவது, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலில் பேராவூரணியில் இருந்து 35 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

    எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை மற்றும் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என கூறினார்.

    • விரைவு ரெயில் ஸ்ரீரங்கம்- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகின்றன.
    • சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய 3 நாட்களில் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரெயில் (வண்டி எண்-06498/06499) மற்றும் மயிலாடுதுறை- திருச்சி- மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரெயில் (16233/16234) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    திருப்பாதிரிபுலியூர்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06889) லால்குடி- திருச்சி இடையேயும், வேளாங்கண்ணி- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06839) பொன்மலை- திருச்சி இடையேயும், திருச்சி- காரைக்கால் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06880) திருச்சி- திருவெறும்பூர் இடையேயும், திருச்சி- திருப்பாதிரிபுலியூர் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06890) திருச்சி- வாளாடி இடையேயும், விருத்தாசலம்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06891) ஸ்ரீரங்கம்- திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சி- விருத்தாசலம் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06892) திருச்சி-லால்குடி இடையேயும், காரைக்குடி- திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06126) குமாரமங்கலம்- திருச்சி இடையேயும், திருச்சி காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06125) திருச்சி- குமாரமங்கலம் இடையேயும், சென்னை- திருச்சி சோழன் விரைவு ரெயில் (22675) பொன்மலை- திருச்சி இடையேயும் ரத்து செய்யப் படுகின்றன.

    ஹுப்ளி-தஞ்சாவூர் இடையிலான சிறப்பு கட்டண விரைவு ரெயில் (07325) நாளை (செவ்வாய்கிழமை) சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தெற்கு ரெயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், எம்.பி.யுமான நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், ராமேசுவரம்-வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் ராமநாதபுரம் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் பல்வேறு ரெயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றேன்.

    அந்த ரெயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    ×