என் மலர்
நீங்கள் தேடியது "பணமோசடி"
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
மதுரை
மதுரை மாவட்டம் பூசாரிப்பட்டி அருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த கிராம பெண்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊருக்கு கோமதி புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆணும் வந்த னர். அவர்கள் எங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பதாக கூறினர். அதை நம்பி அந்த பயிற்சி யில் சேர்ந்தோம். அப்போது நாங்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணம் மற்றும் போட்டோ ஆகியவற்றை வாங்கி கொண்டனர். 45 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 40 பெண்கள் கலந்து கொண்டோம்.
பயிற்சி முடிந்ததும் எங்களது ஆவணங்களை திருப்பிதரும்படி கேட்டோம். அதனை மேலூருக்கு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினார்கள். மேலும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் தருவதாக கூறினர்.
அவர்கள் கூறியதை நம்பி சில விண்ணப்பங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அவர்கள் கூறியபடி மேலூருக்கு சென்றோம். அப்போது ஆவணங்களை தராமல் அவற்றை உங்கள் ஊருக்கே வந்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் எங்களது ஆவணங்களில் சில திருத்தங்களை செய்துள்ளனர். அதற்கு வந்த ஓ.டி.பி. போன்றவற்றை எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதில் போட்டோக்களை மாற்றி வைத்து வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்வது தெரியவந்தது.
இதுபற்றி நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலில் உள்ளோம். எங்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்த 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5.4 சதவீதம் வட்டி தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
கோவை
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 48). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனலில் ஒளிபரப்பான விளம்பரத்தை பார்த்தேன். அதில், தங்கம் மற்றும் ஆயிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி நான் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தேன்.
பின்னர் அதனுடன் தொடர்புடைய வாட்ஸ் ஆப் குரூப்பில் நான் இணைக்கப்பட்டேன். 2 நாட்கள் முதல் 360 நாட்கள் வரை தங்கம் மற்றும் ஆயிலில் முதலீடு செய்யலாம் எனவும், தொகைக்கு ஏற்ப 5.4 சதவீதம் வட்டி தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பிய நான் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டேன். முதற்கட்டமாக எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 42ஆயிரத்து 512 பணம் எடுக்கப்பட்டது.
அதன்பின்னரும் படிப்படியாக எனது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.5.50 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அந்த பணத்தை மீண்டும் தனது வங்கி கணக்கில் வரவு வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் நான் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பின்னர் அந்த லிங்க்கில் உள்ளே நுழைய முடியவில்லை.
யூடியூப்பில் விளம்பரம் செய்து போலியான லிங்க் அனுப்பியும், வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்தும் என்னிடம் இருந்து ரூ.5.50 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே அந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் (வயது32). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 12 பேர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட பொருளாளரான மாதவத்துரை (39) மற்றும் கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் ஆகியோரை அனுகினர். அவர்கள் பழனி கோவிலில் வேலை வாங்கி தருவதாகவும், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ரூ.34 லட்சம் பெற்றனர்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
மாதவத்துரை தலைமறைவான நிலையில் கலில்ரகுமான் இதேபோன்று பல்வேறு நபரிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






