search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
    X

    வள்ளியூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

    • வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும்போது, கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கடும் இடி- மின்னல், மழைப்பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என கூறினார்.

    Next Story
    ×