என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "High Court"
- மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
- இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
- ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
- ஜாமீன் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பைசல் என்ற இளைஞர் இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார் என்பதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் கடந்த மே மாதம் மிஸ்ராட் பகுதி போலீசால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கில் ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான விசாரணையில், ஜாமீன் வழங்க வேண்டும்என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் கட்டி மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜே என உச்சரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த உத்தரவின்படி பைசல் தேசிய கோடிக்கு 21 முறை சல்யூட் வைத்து பாரத் மாதா கி ஜே சொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
यह है "फैजल निसार" इसने 'पाकिस्तान जिंदाबाद' का नारा लगाया था।अब कोर्ट के आदेश पर यह 21 बार 'भारत माता की जय' के नारे के साथ तिरंगे को सलामी दे रहा है। क्या इस सजा के बाद इसका मन बदल जाएगा pic.twitter.com/bMcbUiB9nF
— Baat Bharat Ki (@eBBKLive) October 22, 2024
- மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
- கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி மற்ற போதைப்பொருட்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. இது 'இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்' என புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, இது குறித்து விளக்கம் அளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது ] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
- தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார்
இறந்த மகனின் விந்தணுவை சொத்தாகக் கருத முடியும் என்றும் அதை பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கேன்சர் நோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார் அவர். தற்போது சிகிச்சை பலனளிக்காமல் ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்த நிலையில் அவரின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மகனின் விந்தணுவை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
- சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
- போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும்
- இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் [2023] தகவல் தொழில்நுட்ப [ஐடி] சட்டத்தில் கொண்டுவந்த திருத்தும் செல்லாது என்று மும்பை உய்ரநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் போலியான மற்றும் தவறான வகையில் பதிவிடப்படும் தகவல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழுவை அந்த சட்டத்திருத்தத்தின்படி மத்திய அரசு அமைத்திருந்தது.
இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும். ஆனால் இது அரசை விமர்சிக்கும் எந்த ஒரு கருத்தையும் நீக்க முடியும் என்ற அதிகாரத்தை நிறுவுவதாக அமைத்துள்ளதால் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எழுந்தது. எனவே இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீது இன்று நடந்த விசாரணையில், இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 [சமத்துவத்திற்கான உரிமை] மற்றும் பிரிவு 19 [பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்], பிரிவு 19(1) (g) [சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை] ஆகியவற்றை மீறும் வகையிலும், 'போலியான' மற்றும் 'தவறான' என்பதை இதன்மூலம் நிர்ணயிக்க முடியும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததாகவும் உள்ளது என்று தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அமைத்த தகவல் சரி பார்ப்பு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
- கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு.
- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி. பாலாஜி, நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர். கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி. திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதோடு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உத்தரவின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 63-ஆக அதிகரித்துள்ளது.
புதிய நீதிபதிகள் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
- பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.
பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தொடர்ந்து பல முறை பாலியல் உறவு வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்மீதான குற்றப்பத்திரிகையை எதிர்த்து தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வக்கீல், பெண்ணின் அனுமதியுடனேயே இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்றும் இது பலாத்காரத்தின் கீழ் வராது என்றும் அந்த வக்கீல் வாதாடியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இருவரும் இடையிலான உறவு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதன் மூலம் தொடர்ந்துள்ளது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த உறவு பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளபடி ஏமாற்றியும் மிரட்டல் மூலமும் நடந்துள்ளது. பெண்ணின் அனுமதியுடனேயே இருவருக்கும் இடையில் பாலியல் உறவு இருந்தாலும் அது பெண்ணை பயமுறுத்தியும், தவறாக வழிநடத்தியும் இருக்குமாயின் பலாத்காரத்துக்கான சட்டப்பிரிவு 376 இந்த கீழ் வரும் என்று தெரிவித்து அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கு தொடர்பாக பலாத்காரம் என்ற முகாந்திரத்திலேயே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர்.
- போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
- இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டி வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அதனைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் கடும் புயலை கிளப்பியிருக்கிறது.
நடிகைகள் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.
இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.
- கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாதம் ரூ.12,000 சம்பளம் வாங்கும் கணவன் குழந்தை பராமரிப்பு செலவாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கணவன் ரூ.12,000 மட்டுமே சம்பளம் வாங்குவதை அறிந்த நீதிபதி, உங்களுக்கு ரூ.10,000 கொடுத்துவிட நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் எப்படி வாழ முடியும்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கணவரின் ஊதியம் அதிகரித்தால், குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்கக்கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Husband earns ₹12,000 a month.He pays ₹10,000 as #Maintenance to wifeThe judge shocks how did the lower court granted such maintenance.The judge "How will be live?" pic.twitter.com/jO1gZnUXQ3
— ShoneeKapoor (@ShoneeKapoor) August 31, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்