கொலை வழக்கில் 40 ஆண்டுகள் கழித்து 100 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த உயர்நீதிமன்றம்

அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது.
கொலை வழக்கில் 40 ஆண்டுகள் கழித்து 100 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த உயர்நீதிமன்றம்
Published on

40 ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நிரபராதி என நீதிமன்றம் தற்போது விடுத்துள்ளது.

விடுவிக்கப்பட்ட தானி ராம்-க்கு தற்போது வயது 100. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தானி ராம். 1982-ஆம் ஆண்டு ஒரு நிலத் தகராறில் நடந்த கொலை தொடர்பாக தானி ராம் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1984-ஆம் ஆண்டு ஹமிர்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து 1984-லேயே தானி ராம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.

இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திர தாரி சிங் மற்றும் சஞ்சீவ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தானி ராமை விடுவித்து நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.

ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com