search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appreciation ceremony"

    • மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜிப்மர் உள்ளிட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் தாளாளர் பிரடரிக் ரெஜிஸ் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ரீட்டா பிரடரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, பள்ளியின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • சங்கீத கலாநிதி பக்தவத்சலத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
    • விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி.திருமண மண்டபத்தில் அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து கர்நா டக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடத்தியது.

    ராமநாதபுரம் கலை மாமணி சி.எஸ்.சங்கரசிவம், சங்கீத வித்வான்கள் சீனிவாசா ஐயர், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ.சி.எஸ். முருக பூபதி ஆகியோர் நினைவாக சங்கீத கலாநிதி விருது பெற்ற கலை மாமணி திருவாரூர் பக்தவத் சலத்திற்கு பாராட்டு விழா தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸ் அவர்களுக்கு குமரகான இசை மணி விருது வழங்கப்பட்டது.

    திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், எஸ்.கிரீஷ் பாட்டு, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் வயலின், ஆலத்தூர் ராஜ் கணேஷ் கஞ்சிரா உள்ளிட்ட இசை கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சத்குரு சங்கீத வித்யாலயம் இசை கல்லூரி முதல்வர் தியாக ராஜன் முன்னாள் முதல்வர் லதா வர்மா, பேங்க் ஆப் பேங்க் ஆப் பரோடா மேலாளர்கள் பிரபாகரன் ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் மதுரை குமர கான சபா ட்ரஸ்ட் முனைவர் லஷ்மண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தி.மு.க. ஆட்சியை சூரசம்ஹாரம் செய்வார் எடப்பாடி பழனிசாமி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்ப ரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட் பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல். ஏ. தலைமை தாங்கி பேசியதாவது-

    இன்றைக்கு அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இன் றைக்கு நல்ல நாள் முருகன் அசுரனை வதம் செய்கிற சூரசம்ஹாரம் நடக்கின்ற நாளாகும். எனவே தான் இந்த சிறப்புமிக்க இந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

    தமிழக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் தீமையான காரியங்களை தி.மு.க. அரசு செய்து வரு கிறது. அன்றைக்கு அசுரன் எப்படி மக்களை வாட்டி வதைத்தானோ அது போல முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழக மக்களை பல் வேறு வரிச்சுமைகளை விதித்து வாட்டி வதைத்து வருகிறார். அதிலிருந்து விடுவிக்க முருக பெருமான் அவதாரம் எடுத்தது போல இன்றைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப் பாடியார் புதிய அவதாரம் எடுத்து தி.மு.க. என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்து விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தருவார்.

    அந்த வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில தடகள போட்டிக்கு தேர்வானவிவேகா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

    விராலிமலை,  

    மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் 14,17, மற்றும் 19 வயது பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்ட போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 1500 மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யுவராஜ் (உயரம் தாண்டுதல் முதல் பரிசு), சஞ்சய் (100 மீட்டர் ஓட்டம் முதல் பரிசு), தினேஷ் (முதல் பரிசு தடை ஓட்டம்), சவன்குமார் (80 மீட்டர் முதல்பரிசு, உயரம் தாண்டுதல் இரண்டாம் பரிசு),நித்திஷ் (100 மீட்டர் இரண்டாம் பரிசு) ஆகியோர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று மாநில அளவில் வரும் அக், 27-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வெல்கம் மோகன், இயக்குநர் அருண் பிரசாத், முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் அடைகலம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன். இவரது பொதுப்பணியை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து 2-வது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டதை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம், கோதை, பாமா, நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார். கோவில் அர்ச்சகர் கண்ணபிரான், பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கி னர். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி விஸ்வநாதன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுரவித்தனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்கலூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்கள் சமுதாய பங்கேற்பாக கோடை விடுமுறையில் நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பல்லடம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார்.இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபடி போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை யாசிரியர் வெங்கடசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 78 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

    பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    முகம்மது சதக் அறக்கட்டளையின் பொன் விழாவினை முன்னிட்டு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தவசலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஹமிதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாசர் வாழ்த்த பேசினார்.

    கீழக்கரை அல்பைனா பள்ளி ஆசிரியை முகமது ஜெய்லானி, சாயல்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ், பொன்விழா கேடயம் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பேராசிரியை ஜக்கினா ஆமினா, சுபேர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • ஏர்வாடி தர்ஹா நகர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா நடந்தது.
    • அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றி யம், ஏர்வாடி ஊராட்சிக்குட் பட்ட தர்ஹா நகர் (தண்ணீர் பந்தல்) பகுதியில் அமைந் துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–யில் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினமான நேற்று நன்றி பாராட்டு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளிக்கு புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உறுது ணையாக இருந்த தற்கும், மாணவர்கள் நிழலில் அமர்ந்து கல்வி பயில இரண்டு பள்ளிக் கட்டிடங்க ளுக்கு இடையில் உள்ள பகுதிக்கு ஊராட்சியின் மூலம் செட் அமைத்து கொடுத்ததற்கும், பள்ளி வளாகத்தில் வெண்ணி லப்பகுதி முழுவதும் ஊராட் சியின் மூலம் இண்டர்லாக் தளம் அமைத்து கொடுத்த தற்கும் நன்றி தெரிவிக்கப்பட் டது.

    ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.வி.செய்யது அப்பாஸ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜாஹிர் அப்பாஸ், இப்பள்ளியில் பயிலும் சுமார் 140 மாணவ, மாணவி களுக்கும் இலவசமாக 2 செட் பள்ளி சீருடை, இரண்டு செட் சாக்ஸ், இரு ஜோடி ஷூ ஆகியவைகளை வழங்கிய மலேசியாவை சேர்ந்த குட் பீப்புள் கிளப் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த நாகூர் மற்றும் அவரின் மனைவிக்கும்,

    மலேசிய குட் பீப்புள் கிளப் தொண்டு நிறுவ னத்தை இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவச சீருடை சேவையை செய்ய தூண்டு தலாக செயல்பட்ட பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரக்கத் ஹோட்டல் உரிமையாளர் ஆசிக், பள்ளியின் வளர்ச்சி யில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஏர்வாடி கல்வி தொண்டு அறக் கட்டளை தலைவர் ஏர்பாத் பாதுஷா, சமூக சேவகர் நல்லா (எ) நல்ல இபுராஹிம் ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டு அனை வருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரி சாக புத்தகம் வழங்கப்பட் டது.

    இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் துல் கருணை பாட்ஷா, பள்ளி யின் தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • த.மு.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
    • 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவி ஆதிபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனணயத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியா வில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடி களிலும் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இட ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் த.மு.மு.க. தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினு லாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.

    கிளை தலை வர் காதர் வரவேற்றார். ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளா ளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்ட னர். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதே போல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.

    • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.

    ×