search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா
    X

    அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா

    • ஏர்வாடி தர்ஹா நகர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா நடந்தது.
    • அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றி யம், ஏர்வாடி ஊராட்சிக்குட் பட்ட தர்ஹா நகர் (தண்ணீர் பந்தல்) பகுதியில் அமைந் துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–யில் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினமான நேற்று நன்றி பாராட்டு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளிக்கு புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உறுது ணையாக இருந்த தற்கும், மாணவர்கள் நிழலில் அமர்ந்து கல்வி பயில இரண்டு பள்ளிக் கட்டிடங்க ளுக்கு இடையில் உள்ள பகுதிக்கு ஊராட்சியின் மூலம் செட் அமைத்து கொடுத்ததற்கும், பள்ளி வளாகத்தில் வெண்ணி லப்பகுதி முழுவதும் ஊராட் சியின் மூலம் இண்டர்லாக் தளம் அமைத்து கொடுத்த தற்கும் நன்றி தெரிவிக்கப்பட் டது.

    ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.வி.செய்யது அப்பாஸ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜாஹிர் அப்பாஸ், இப்பள்ளியில் பயிலும் சுமார் 140 மாணவ, மாணவி களுக்கும் இலவசமாக 2 செட் பள்ளி சீருடை, இரண்டு செட் சாக்ஸ், இரு ஜோடி ஷூ ஆகியவைகளை வழங்கிய மலேசியாவை சேர்ந்த குட் பீப்புள் கிளப் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த நாகூர் மற்றும் அவரின் மனைவிக்கும்,

    மலேசிய குட் பீப்புள் கிளப் தொண்டு நிறுவ னத்தை இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவச சீருடை சேவையை செய்ய தூண்டு தலாக செயல்பட்ட பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரக்கத் ஹோட்டல் உரிமையாளர் ஆசிக், பள்ளியின் வளர்ச்சி யில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஏர்வாடி கல்வி தொண்டு அறக் கட்டளை தலைவர் ஏர்பாத் பாதுஷா, சமூக சேவகர் நல்லா (எ) நல்ல இபுராஹிம் ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டு அனை வருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரி சாக புத்தகம் வழங்கப்பட் டது.

    இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் துல் கருணை பாட்ஷா, பள்ளி யின் தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×