என் மலர்

    நீங்கள் தேடியது "Traffic inspector"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து.
    • பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    நெல்லை:

    பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர் பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து மக்கள் சிரமமின்றி செல்வதற்கு வழிவகை செய்துள்ளார்.

    மேலும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இவரது பணியை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து, மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர்.

    இதுகுறித்து சோலைக்குள் நெல்லை அமைப்பின் தலைவர் நாகராஜன் கூறும் போது,

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பதவி ஏற்ற பிறகு பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார். போக்குவரத்து காவலர்கள் இல்லாத போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தான் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் முடிந்தவரை மரங்களை நட்டு அந்த இடத்தை பசுமையாக மாற்றியவர். ஊனமுற்றவர்களை எங்கு கண்டாலும் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்பவர். இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பின் சார்பில் பாராட்டுகிறோம் என்றார். நிகழ்ச்சியில் சோலைக்குள் நெல்லை அமைப்பை சார்ந்த மீனாட்சி சுந்தரம், விநாயகம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோபியில் லஞ்சம் வாங்கி தலைமறைவாக உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பதி.

    இவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிக லோடுடன் வரும் லாரிகளை மடக்கி அதன் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இது பற்றிய புகாரின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10 தினங்களுக்கு மாறு வேடத்தில் லாரியில் சென்றனர். அந்த லாரியையும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி மடக்கி லஞ்சம் கேட்டு உள்ளார்.

    மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்-களவுமாக பிடித்தனர். பிறகு அவரை அழைத்து சென்றபோது பின்னால் போலீஸ் வாகனத்தில் சென்ற பதி திடீர் தலைமறைவானார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தேடி கொண்டு இருக்கிறார்கள். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோபியில் உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டிலிருந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளலாம். #TrafficInspector
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

    அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள்.



    அதன்பின்னர் டிரைவர் போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

    சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்றபோது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TrafficInspector

    ×