என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribe"

    • நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.

    இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.

    இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.

    அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.

    அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.

    அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.

    பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    • பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வைரலாகியது.

    மேலும் இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதன்பேரில் இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.

    விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
    • சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

    இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி சந்திரசேகரன், அவரது மனைவி பர்வதம், தாயார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் (55) இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பர்வதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து பர்வதம் ஈரோட்டை சேர்ந்த தனது சகோதரர் வேலுச்சாமியை வைத்து பேரம் பேசியதில் ரூ.5 ஆயிரம் பெற சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுச்சாமி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். தற்போது இவர் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 2009-ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், பிரிவு 13 டி பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாடு திருட்டு வழக்கை விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைத்து அழுத்தியும் முடியவில்லை.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில், மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் விசாரணை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது.

    பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார். முதலில் 6000 ரூபாய் கொடுத்த ஷுப்நாத், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை அனுப்பி பணத்தை கொடுக்க செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர், லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சிப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் அவசரம் அவசரமாக பணத்தை விழுங்குவதும் பதிவாகி உள்ளது. பணத்தை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார். இந்த போராட்டத்தில் தலையிட்ட மற்றொரு நபரை அதிகாரிகள் தடுத்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர்.
    • ஐயப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    சபரிமலையில் தற்போது மண்டல பூஜைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் தமிழக-கேரள எல்லையில் குமுளி வழியாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

    கேரளாவிற்குள் நுழையும் இந்த வாகனங்களுக்கு தற்போது ஆன்லைனில் பெர்மிட் பதிவு செய்யப்படுகிறது. எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக ஐயப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஷாஜி ஜோஸ் தலைமையிலான போலீசார் தமிழக பகுதிக்கு வந்து ஐயப்ப பக்தர்களுடன் பக்தர்கள் போல் சென்றனர். அப்போது எல்லையில் உள்ள கேரள சோதனைச்சாவடியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், அலுவலக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

    வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர். அப்போது ஐயப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பக்தர்களிடம் வசூல் செய்து வைத்திருந்த ரூ.5000 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஐயப்ப சீசன் களைகட்டி வரும் நிலையில் பக்தர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து போலீசார் இது போன்ற சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • சபரிமலை சீசன் தொடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர்.
    • வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளியில் கேரள கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும்.

    சபரிமலை சீசன் தொடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இங்கு வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

    இதில் கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து அப்போது பணியில் இருந்த கலால்துறை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜோசப், தடுப்புஅலுவலர்கள் ரவி, ரஞ்சித், ஜேம்ஸ்மேத்யூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் கலால்துறை ஆணையர் அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதே சோதனைச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வீரபாண்டி அடுத்த கொழிஞ்சிப்பாடி பகுதியில் தனது தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    அதன்பேரில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த புரோக்கர் கண்ணன் ஆகியோர் பழனிவேலின் தாயாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டனர். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பழனிவேல், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நேற்று மதியம் உடையாப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது புரோக்கர் கண்ணனிடம், பழனிவேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

    பிறகு அவர் அந்த பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் ஜெயிலில் அடைப்பதற்காக நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 2 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார், புரோக்கர் கண்ணனை ஜெயிலில் அடைத்தனர். சார்பதிவாளர் செல்வபாண்டியனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பரிசோதித்து வார்டு அறையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்புக்காக அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது பற்றி போலீசார் கூறுகையில், சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு சிகிச்சை முடிந்ததும், உடல் நிலை சீராகி விட்டது என டாக்டர்கள் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

    • புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    ×