என் மலர்

    நீங்கள் தேடியது "Shield"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியின் 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினார்.

    விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றிய குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள் கலந்து கொண்டனர்.

    சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு கலெக்டர் கேடயம் வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் அரசுப் பணியாளா்களுக்கு தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணை களும் செயலா க்கமும், மொழிபெயா்ப்பும் கலை ச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு ஆட்சியா் கேடயம் வழங்கினாா். இக்கேடயத்தை அந்த அலுவலகம் சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் பெற்றுக் கொண்டாா்.

    இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சபீா்பானு, மன்னா் சரபோஜி அரசுக் க ல்லூரி உதவிப் பேராசிரியா் அமுதா, அரசா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆடு, மாடு, கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.
    • கன்று வளர்த்த விவசாயிகள் 3 பேருக்கு கேடயம்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    முகாமில் 1100 க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, கோழி, போன்ற கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள், வழங்கப்பட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்தும் சிறப்பான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்கள், கலியபெருமாள், தினேஷ்குமார், கால்நடை ஆய்வாளர், செல்வேந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர்,

    மேலும், கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் காண ஏற்பாடுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன், சிறப்பாக செய்திருந்தார் முகாமில் சிறந்த கிடேரி கன்று வளர்க்கும் விவசாயிகள் 3 பேருக்கு பரிசு பொருள், சிறந்த கால்நடை விவசாயிகள் 3 பேருக்கு கேடயம் வழங்கப்பட்டது,

    இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இரா, கண்ணையன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட சிலரிடமிருந்து நடப்பாண்டு ரூ.3 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அளவில் அதிக நிதி திரட்டிய நூலகங்களில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு முதலிடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கான கேடயத்தையும், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகருக்கும் 2022-ம் ஆண்டுக்கு நல் நூல்கர் விருதான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதையும் வழங்கி பாராட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.
    • இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு தொடக்க க்கல்வி துறை சார்பில் 2021-22-ம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊரக ஒன்றியம், தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

    பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.

    இதனை தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ரீட்டாமேரி, ஆசிரியர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இந்த விருது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர், சிறப்பு பணி அலுவலர் இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.
    • 145 படைப்புகளை மாணவ-மாணவிகள் சமர்ப்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 30-ம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆரிப் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தொடக்கவுரை ஆற்றினார்.

    நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், தாசில்தார் ஜெய்சீலன், தனி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் 61 பள்ளிகளை சேர்ந்த 267 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இதில் 145 படைப்புகளை மாணவ- மாணவிகள் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 15 படைப்புகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
    • சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் முதன்முறையாக கிராமம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. மதுரை,விருதுநகர், ராமநாதபுரம்,கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 75 அணிகள் பங்கேற்றன. அரை இறுதி போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர் மற்றும் ஆலம்பட்டி பி அணியினர் மோதியதில் ஏ அணியினர் 9-7 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர். மற்றொரு போட்டியில் துலுக்கப்பட்டி பராசக்தி அணியினரும், ஆலம்பட்டி பொன்னுசாமி அணியினரும் மோதியதில் துலுக்கப்பட்டி அணி 14-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இறுதிப் போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர், துலுக்கப்பட்டி பராசக்தி அணி மோதியதில் ஆலம்பட்டி ஏ அணியினர் 3-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஏ அணியினருக்கு அ.தி.மு.க. திருமங்கலம் யூனியன் தலைவர் லதா ஜெகன் ஆளுயர சுழற் கோப்பை வழங்கினார். 2-வது, 3-வது இடம் பெற்ற அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 2,147 சைக்கிள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத்தலைவர் கி.ரெ. பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அசோக்குமார் எம்.எல்.ஏ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி, தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு செய்து வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், இல்லந்தேடி கல்வித் திட்டம், செஸ் விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகளைப் பங்கேற்க செய்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில், பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, பெருமகளூர், மணக்காடு, மல்லிப்பட்டினம், திருச்சிற்றம்பலம், கரிசவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட 16 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2,147 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், பள்ளித் துணை ஆய்வாளர் அருள்ராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோ, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுவாதி காமராஜ், கல்விப்புரவலர் அப்துல் மஜீது, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×