மன்னார்குடி, தனியார் கல்லூரியில் கருத்தரங்கம்

80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.
மன்னார்குடி கல்லூரியில் பொறியியல் கருத்தரங்கம் நடந்தது.
மன்னார்குடி கல்லூரியில் பொறியியல் கருத்தரங்கம் நடந்தது.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுத்துறை, மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை இணைந்து நடத்திய பொறியியல் கருத்தரங்கம் இ-வொர்டக்ஸ் 2023 நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஏ.ஆர்.ஜெ கல்வி குழுமத் துணை தலைவர் மற்றும் தாளாளர் ஜீவகன் அய்யாநாதன் தலைமை தாங்கினார்.

ஏ.ஆர்.ஜெ கல்விக்குழும தலைவர் ராஜகுமாரி அய்யாநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் பாராட்டுரை வழங்கினார்.

வாண்டையார் பொறியியல் கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் தனசேகர் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றார்.

முன்னதாக மின் மற்றும் மின்னனு துறை தலைவரும் உதவி பேராசிரியருமான பவித்ராதேவி வரவேற்புரை வழங்கினார்.

உதவி பேராசிரியர் உமாசத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்–படுத்தினார்.

நிகழ்ச்சியின் நினைவாக கருத்தரங்கம் பற்றிய புத்தகம் ஒன்றினை மாணவர்களின் கலை ஆற்றல்களை நிறைத்து மின்னனு மற்றும் தகவல் தொடர்புதுறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் அகல்யா அனைத்து விருந்தினர்களுடன் இணைந்து வெளியிட்டனர்.

இந்த கருத்தரங்கில் 12 கல்லூரிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.

முடிவில் மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை உதவி பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com