search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம்
    X

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம்

    • பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட சிலரிடமிருந்து நடப்பாண்டு ரூ.3 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அளவில் அதிக நிதி திரட்டிய நூலகங்களில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு முதலிடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கான கேடயத்தையும், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகருக்கும் 2022-ம் ஆண்டுக்கு நல் நூல்கர் விருதான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதையும் வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×