search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M.P.Saminathan"

    • காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார்.

    காங்கேயம் :

    காங்கேயம் தாராபுரம் ரோட்டில் சக்திநகரில் காங்கேயம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வாராந்திர மாட்டுச் சந்தை அமைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சந்தையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் மகேஷ்குமார், தெற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கே. கே. சிவானந்தம், வடக்கு ஒன்றிய திமுக., செயலாளர் கருணை பிரகாஷ், பொத்தியபாளையம் பஞ்சாயத்து துணைத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பரிசு கிடைக்கவில்லை என்றாலும் மாணவர்கள் சோர்வடைய தேவையில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் புனித ஜோசப் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதனை கலெக்டர் வினீத் தலைமையில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கான்ஸ்ட ன்டைன் ரவீந்திரன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-

    தலை நிமிரும் தமிழகம் என்றலட்சியத்தை தமிழகக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பேச்சுப் போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான். போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்கவில்லை என்றாலும்மாணவர்கள் சோர்வடைய தேவையி ல்லை. எனவே, அனைத்து மாணவர்களும்தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என்பது எனதுவேண்டுகோள். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்நிலையங்களுக்கு சென்றுஅறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். நல்ல நூல்களை படிக்கும் போது தான்நமக்குரிய சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். பேரறிஞர் அண்ணா நல்லபுத்தகங்கள் தான் நல்ல நண்பன் என்பார்கள். அந்தளவிற்கு மாணவர்களாகிய நீங்கள்அ வசியம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

    புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. மாணவ,மாணவிகள் எந்த தேர்வாக இருந்தாலும் சரி அல்லது இது போன்ற போட்டியாகஇருந்தாலும் சரி வாய்ப்பை இழக்கும் பொழுது சோர்வடைந்து விடாமல் எந்தசூழ்நிலைக்கும் ஆட்படாமல் இலட்சியத்தை அடையும் வரையிலும் முயற்சி செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியுடன் நீங்கள் போட்டி தேர்வை எதிர் கொண்டுவாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன் என்றார். மாநில சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்ததாவது:-

    இந்திய மொழிகளில் 114நாடுகளில் தமிழ்மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. மாணவர்கள் ஆகிய உங்களுக்குகொடுக்கப்பட்ட தலைப்புகளில் மற்றவர்கள் சிந்தித்து பார்கின்ற அளவிற்குஉங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் பற்றுடன் இருத்தல் வேண்டும். மாணவர்கள் பேச்சுப்போட்டிகளில் சிறந்து விளங்கவேண்டும் என்றால் அதிகளவில் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை யெல்லாம்சேகரித்து படிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், துணை மேயர் பாலசுப்பிரமணியன் , திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 3-ம் மண்டலத்த லைவர்கோவி ந்தசாமி, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலர் குழந்தைதெரஸ் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொது அமைப்புகள் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது தொடர்ந்து வருகிறது.
    • தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம் சென்னிமலை சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகன மேடை புதிதாகக்கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த எரிவாயு தகன மேடையை அர்ப்பணித்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைத்தார். கலெக்டர் எஸ்.வினீத் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து வைத்தார். திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் அலுவலர் குடியிருப்பை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகனமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுபோன்ற பொது அமைப்புகள் நமது மாவட்டத்தில் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது, கூடுதலாக பள்ளி கட்டிடங்கள் அமைப்பது என எண்ணற்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

    இதுபோல் தொடர்ந்து பொதமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் பொறுப்பேற்கும் போது அன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் உடனே அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தியதன் விளைவாக தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

    காங்கயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியதற்கும், முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைய உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் காங்கயம் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்தற்கும் முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும் காங்கயம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், காங்கயம் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ், ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் ஜி.பழனிசாமி, துணைத்தலைவர் எம்.மோகன்ராஜ், செயலாளர் எஸ்.துரைமுருகன் என்ற ஸ்ரீதர், பொருளாளர் எம்.எஸ்.மனோகரன், திருப்பூர் மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க செயலாளர் அப்பு சிவசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காங்கயம் ராமசாமி, நன்கொடையாளர் லோகநாதன் உள்பட ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ரோட்டரி காங்கயம் டவுன் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விழா நடைபெற்றது.
    • வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 101 மிதிவண்டிகளும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி. சிவக்குமார். அன்பரசன்.ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட்ட அதே கட்டிடத்தில் தற்போது வரை நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான போதுமான இடவசதி அந்த கட்டிடத்தில் இல்லாததால் விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் புதிய கட்டிடம் கட்ட 18-வது வார்டில் ராக்கியாபாளையம் ராசாத்தாகுட்டை அருகே இருந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருசில கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே இடத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ரூ.3 .50 கோடி மதிப்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பில் 14-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி டவுன்சிப் பகுதியில் மண்சாலையை தார்சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாலும், தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் மூடப்படாமல், வரி வசூல் உள்பட ஒருசில பணிகளுக்காக அந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி தலைவர் குமார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், துணை தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், 18-வது வார்டு கவுன்சிலர் தங்கம் பூபதி, தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் மூர்த்தி உள்பட நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன்,திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை வகித்து 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

    விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 74 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கரடிவாவியில் எஸ்.என்.எம்.எல். மேல்நிலை பள்ளியில் 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி வரவேற்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு,ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன், மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி, மற்றும் என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிற்பி செல்வராஜ், செம்மிபாளையம் திருமூர்த்தி, கீர்த்தி சுப்பிரமணியம், இளைஞரணி ராஜேஸ்வரன், மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது.
    • 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் வட்டாரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிந்த பணிகளை திறந்து வைத்தும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வருகிற 5ந் தேதி சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரால் காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 137 மாணவர்களுக்கும் 178 மாணவிகளுக்கும் என மொத்தம் 315 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,97,551 மதிப்பீட்டிலும், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 245 மாணவிகளுக்கு ரூ.12,23,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.பின்னர் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் முதல் பொங்கலூர் சாலையில் தொடங்கி குன்னாங்கல்பாளையம் ஆதிதிராவிடர் காலணி வரை ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், கணபதிபாளையம் ஊராட்சி எஸ்.ஆர்.சி நகர் பகுதியில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் தானியக்கிடங்கு கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்தும், அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.92.62 லட்சம் மதிப்பில் 13 வளர்ச்சி புதிய பணிகளை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.1 கோடியே 46லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் முடிந்த பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

    இந்தநிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முருகேஷன், பல்லடம் கூட்டுறவு கள அலுவலர் சுரேஷ்குமார்,ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் தேன்மொழி, பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை அமைச்சர் வழங்கினார்.

    மங்கலம்

    திருப்பூர் மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த முப்பெரும் விழாவிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.விஸ்வலிங்கசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கவி, பெருமாநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்யா முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், ஊராட்சி மன்ற 9-வது உறுப்பினர் முகமது இத்ரீஸ், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரபிதீன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் எச்.ரபிதீன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×