search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் மாட்டுச்சந்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

    காங்கயத்தில் மாட்டுச்சந்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார்.

    காங்கேயம் :

    காங்கேயம் தாராபுரம் ரோட்டில் சக்திநகரில் காங்கேயம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வாராந்திர மாட்டுச் சந்தை அமைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சந்தையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் மகேஷ்குமார், தெற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கே. கே. சிவானந்தம், வடக்கு ஒன்றிய திமுக., செயலாளர் கருணை பிரகாஷ், பொத்தியபாளையம் பஞ்சாயத்து துணைத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×