search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crematorium"

    • மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.
    • 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் முடிவுற்கு பயன்பாட்டுக்கு வந்தன.

    கம்பம்:

    கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை கம்பம் கிழக்குப் பகுதியில் முல்லைப்பெரி யாறு ஆற்றின் கரை யோரத்திற்கு சென்று தகனம் செய்து வருகின்றனர்.

    இங்கு மரக்கட்டைகள், வறட்டி உள்ளிட்டவைகளை கொண்டு உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதே போல் நகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவீன தகன மேடை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் இருந்து வந்தது. மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.

    இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழைக் காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடையின் தரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது, அதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வந்தன.

    இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் நவீன எரிவாயு தகன மேடை நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடை ந்ததையடுத்து கியாஸ் எரிவாயு பொருத்தப்பட்ட தகன மேடை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    இதையடுத்து தகனமேடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் தொண்டு நிறுவன த்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது.இதற்கு நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் வாசுதே வன்,நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் சுல்தான் சல்மான் பார்சி மற்றும் நகராட்சி பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • வேப்பங்குளம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் இறந்தவர்களின் உடலை அதன் அருகே உள்ள ஓடை வழியாக கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும், மழை காலங்களில் ஓடை களில் தண்ணீர் செல்லும் போது மிகுந்த சிரமப்படுவதாகவும் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டு ஓடையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அவரது உறவி னர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்று காலை நெல்லை டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து ஓடை வழியாக விஜயக்குமார் உடலை சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

    • வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனையடுத்து ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.வெங்கடசுப்பு, செயலாளராக ஆர்.அருண்குமார், பொருளாளராக கே. ரத்தினசாமி என்கிற மணிவேல், துணைத்தலைவராக வீ.சி.சுவாமிநாதன், நிர்வாக செயலாளராக ராசி கே.ஆர் சின்னசாமி மற்றும் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

    பதவியேற்பின் போது தலைவர் ஆர்.வெங்கடசுப்பு கூறியதாவது:- கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் பகுதியில் கண் சிகிச்சை முகாம், பொது நல மருத்துவ முகாம், செயற்கை கால் வழங்கும் முகாம் மற்றும் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்சக்தி என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான மின்மயானத்தை ரோட்டரி சார்பில் நவீனப்படுத்தி செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி .கோபாலகிருஷ்ணன், என் .மணிமாறன், எம்.பிரேம்குமார், டி.கே. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் சங்க முன்னாள் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எஸ்.ரகுநாதன், செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஏ.மகாதேவன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொது அமைப்புகள் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது தொடர்ந்து வருகிறது.
    • தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம் சென்னிமலை சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகன மேடை புதிதாகக்கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த எரிவாயு தகன மேடையை அர்ப்பணித்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைத்தார். கலெக்டர் எஸ்.வினீத் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து வைத்தார். திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் அலுவலர் குடியிருப்பை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகனமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுபோன்ற பொது அமைப்புகள் நமது மாவட்டத்தில் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது, கூடுதலாக பள்ளி கட்டிடங்கள் அமைப்பது என எண்ணற்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

    இதுபோல் தொடர்ந்து பொதமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் பொறுப்பேற்கும் போது அன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் உடனே அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தியதன் விளைவாக தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

    காங்கயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியதற்கும், முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைய உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் காங்கயம் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்தற்கும் முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும் காங்கயம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், காங்கயம் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ், ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் ஜி.பழனிசாமி, துணைத்தலைவர் எம்.மோகன்ராஜ், செயலாளர் எஸ்.துரைமுருகன் என்ற ஸ்ரீதர், பொருளாளர் எம்.எஸ்.மனோகரன், திருப்பூர் மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க செயலாளர் அப்பு சிவசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காங்கயம் ராமசாமி, நன்கொடையாளர் லோகநாதன் உள்பட ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ரோட்டரி காங்கயம் டவுன் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
    • பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பாபநாசம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.

    வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தை பனந்தோப்பு அருகே சுடுகாடு பகுதியில் மின்சார தகனமேடை அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கலைஞர் நகர்புற மேம்பாடு திட்ட நிதியிலிருந்து ரூ.ஒருகோடியே 32.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை சந்தைபனந்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் செயல் அலுவலர் நந்தகுமார், பொறியாளர் சபீலால், துணைதலைவர் தனபால், நகர செயலாளர் உமா சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி.
    • வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பிரிவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பச்சாபாளையம், பனப்பாளையம்,ராயர்பாளையம்,நடுப்புதூர், அபிராமி நகர்,கரையாம்புதூர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கனகுமணி துரைகண்ணன், நகர அ.தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி. நகர அவைத்தலைவர் தமிழ்நாடு பழனிசாமி, நகர துணை செயலாளர் லட்சுமணன்,மற்றும் துரைகண்ணன், ரமேஷ், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ச்சுணன், பா.ஜ.க.சார்பில் கிருஷ்ணபிரசாத், அண்ணாதுரை, பா.ம.க.சார்பில் காளியப்பன், முன்னவன்,பாஸ்கரன், பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அய்யாசாமி,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் அதிகாரிகள் உங்களது கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நேற்று பச்சாபாளையம் பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி, பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது. எவ்வளவு இடம் உள்ளது. ஆய்வு செய்யவே வந்துள்ளோம். என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பின் எந்தவித தகவலும் சொல்லாமல், நீங்கள் அளவீடு பணி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு எரிவாயு தகன மேடை அமைப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்து நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். அதற்கான பதில் தராமல் திட்டப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என ஆவேசப்பட்டனர்.

    இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி,1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி, இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில்,போக்குவரத்து பிரச்சனை இல்லாத, நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வந்தனர். ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் , எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து எரிவாயு தகனமேடை பணியை தொடக்க அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகரமன்ற தலைவர் குணசே கரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி முதன்மை பொறியாளர் சரவணன், வார்டு கவுன்சிலர்கள் தனபால், பாலசுந்தரம் மற்றும் பலர் பணியை மேற்கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த சில மாதங்களாக தகன மேடையில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் எந்திரம் பழுதாகி விட்டது.

    இதனால் சடலங்கள் திறந்தவெளியில் விறகு களால் எரியூட்டப்பட்டு வருகிறது. மழை பெய்யும் காலங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது.

    அதையடுத்து எரிவாயு தகன மேடையை ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தகன மேடை புதுப்பிப்பு பணிகளை நகராட்சித் தலைவா் காா்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். இதை தொடர்ந்து ராமநாத புரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் அறிவுறுத்த லின்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஊரணிகளை வைகை தண்ணீர் கொண்டு நிரப்பு வதற்கு பெரியகண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாறும் பணியினை நகர்மன்ற தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கருப்புக் கொடிகளை அவிழ்த்துவிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர் .இந்நிலையில், நேற்று மீண்டும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எரிவாயு தகன மேடைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ×