எரிவாயு தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் வீடுகளில் கருப்புக்கொடி

ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ள காட்சி.
வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ள காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கருப்புக் கொடிகளை அவிழ்த்துவிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர் .இந்நிலையில், நேற்று மீண்டும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எரிவாயு தகன மேடைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com