search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perimeter wall"

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
    • நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மரப்பலகை அடித்து சிமெண்ட் கலவை போடப்பட்டிருந்த இடத்தில் ஒரு பகுதியில் திடீரென சரிந்து விழுந்தது.
    • சிமெண்ட் கலவை தரம் இல்லாமல் போடப்பட்டதால் தான் சரிந்து விழுந்துள்ளது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தில் ஊரின் மையப்பகுதியில் உள்ள மிக பழமையான ஊரணியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி சுற்றுச்சுவர்கள் மழையின் போது சரிந்து விழுந்தது. இதனால் அருகில் நின்ற டிரான்ஸ் பார்மர் ஆபத்தான நிலை யில் காட்சியளித்ததால் பெரும் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக கழற்சி வைக்கப்பட்டது.

    சரிந்து விழுந்த பகுதியில் சுற்றுச்சுவர்கள் புதிதாக அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப் பட்டுள்ள நிலையில் மரப் பலகை அடித்து சிமெண்ட் கலவை போடப்பட்டிருந்த இடத்தில் ஒரு பகுதியில் திடீரென சரிந்து விழுந்தது. சிமெண்ட் கலவை தரம் இல்லாமல் போடப்ப ட்டதால் தான் சரிந்து விழுந்துள்ளது என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    எனவே முறையாக சிமெண்ட் ஜல்லி உள்ளி ட்டவற்றை முறை யாக கலவை செய்து தரமான சுற்று சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வ லர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.

    ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.

    தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கவனத்தையும் திசை திருப்பும் வகையில் இது உள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் சாரதாமில் ரோட்டில் செங்கோட்டையன் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளி சுவர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்ட–ப்பட்டு, பள்ளிக்கூடமா? இல்லை சாதாரண கட்டிடமா? என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான அரசியல் கட்சி சுவரொட்டிகள், சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் கோவை கலெக்டர் சுவர்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என்று தெரிவித்து இருந்தார். அதன்படி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவ–டிக்கையும் எடுக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த விதிமுறைகள் இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சுவரொட்டியாகவே காணப்படுகிறது.

    பாலத்தின் தூண்கள், சுவர்கள் என எல்லா இடங்களிலும் சுவரொட்டி ஒட்டி மாநகரின் அழகை குறைத்து வருகின்றனர். தூண்கள், சுவர்களில் ஒட்டியவர்கள் தற்போது பள்ளிக்கூட சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

    பள்ளிக்குள் கல்வி பயில நுழையும் மாணவர்கள், இத்தகைய சுவரொட்டிகளை காணும்போது அவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறகூடிய நிலை காணப்படுகிறது.

    பாலக்காடு ரோடு குனியமுத்தூர் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியின் சுற்று சுவரில் வர்ணம் தீட்டப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்துக் கொண்டு உள்ளே செல்லும் மாணவனுக்கு மனநிலை கல்வி பயில ஏற்றதாக அமைந்திருக்கும்.

    ஆனால் கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் சுவரொட்டிகளை ஒட்டி பள்ளி சுவற்றின் அழகை குலைப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கவன–த்தையும் திசைதிருப்பும் வகையில் இது உள்ளது.

    எனவே கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இணைந்து, பள்ளி சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குனியமுத்தூர் பள்ளியை போன்று அனைத்து பள்ளிகளும் தங்கள் சுற்றுச்சுவரில் திருக்குள் உள்ளிட்டவற்றை எழுதினால் மாணவர்களின் கல்விநிலை இன்னும் மேம்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×