search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi"

    • புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

    விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் விநாயகர் மற்றும் முருகன் வேடம் அணிந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா, மற்றும் உதவியாளர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், கீழடி ஆகிய இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட் களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி – விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக் கப்பட உள்ளது. அவ் விற்பனை மையம் அமைந் துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக் குழு, கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப் பாவது பெற்று இருத்தல் வேண்டும்.

    அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு, கூட்டமைப் பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப் படும்.

    பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
    • தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 11 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
    • நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் பசுமை முன்மாதிரி கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் கலந்து கொண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர், வடக்கூர், கே.டி.சி. நகர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று கீரை, தர்ப்பூசணிகளை வழங்கினார்.

    அப்போது ஊராட்சி செயலர் சுபாஷ், வார்டு உறுப்பினர்கள் பலவேசம், இசக்கி பாண்டி, ராஜாமணி, மக்கள் நலப்பணியாளர் மாரியம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, அங்கன்வாடி ஆசிரியைகள் சீதாலட்சுமி, ராஜலட்சுமி, களத்தி உதவியாளர்கள் ரோஸ்லின், காவேரி, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் செல்லப்பா மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

    விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே அங்கன்வாடி சிறுவர்களிடம் தங்க நகைகள் திருடப்பட்டதாக உதவியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே லாலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். ஆடு மேய்த்து வருகிறார். இவரது மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் அங்குள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடியில் படிக்கின்றனர். சம்பவத்தன்று அவர்களை பள்ளியில் இருந்து ஜெயராமன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாயத்து காணாமல் போய் இருந்தது. வழியில் விழுந்திருக்கலாம் என நினைத்த ஜெயராமன் தேடிப்பார்க்க சென்றார்.

    அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது அதே அங்கன்வாடியில் படிக்கும் முத்துமலை லட்சுமி மகன் முத்துவேல், கண்மணி செல்வன் மகன் வருண்பிரகாஷ், சங்கரேஸ்வரியின் மகள் கவுசிகா ஆகியோரின் தாயத்தும் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த அவர்கள் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரியும் பள்ளப்பசேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி தேவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத்தொடர்ந்து வில்லூர் ேபாலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவை காவூர் ஊராட்சி, புதுகண்டி ப்படுகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2019-20 ஆண்டுக்கான நிதியிலிருந்து ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிறகு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரை ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஊராட்சி துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், ஹாஜா மைதீன், ஒன்றிய துணை செயலாளர்கள் பிரபாகரன், சரவணன், புதுகண்டி படுகை கிளை நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணியன், வினோத், ஒன்றிய பிரதிநிதி கருப்பூர் மகேஸ்வரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    • முன்னதாக சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.
    • சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலைஞர் அறிவாலயம் அருகே 29-வது வார்டு ரெசிடென்ஸ் பங்களா சாலையில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இந்த அங்கன்வாடியை புதுப்பித்து நவீன முறையில் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நவீன அங்கன்வாடியை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக அவர் அங்கன்வாடி அருகே சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடி அருகே சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி, பகுதி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அரசு பள்ளி, அங்கன்வாடி, மற்றும் ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். செல்வநாயகபுரம் மற்றும் ஜின்பேக்டரி ரோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்களில் தரம் கழிப்பறை வசதிகள்குறித்து ஆசிரியர்களிடம் விவரம் கேட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற அவர் அங்கு உள்ள இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    அப்போது மக்களுக்கு வழங்க தேவையான அளவில்ஆயில் இல்லாமல் குறைவாக இருந்ததால் அது குறித்து விவரம் கேட்டு கூடுதல் ஆயில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×