என் மலர்
நீங்கள் தேடியது "GK Mani"
- ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
- பாமக எம்.எம்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
- பாமக கௌரவத் தலைவரும் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ளட்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நாளை நாளை சேலம் மற்றும் தருமபுரி செல்ல இருக்கும் நிலையில் இரு தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தீர்த்து வைக்க ஜி.கே. மணி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும்.
- நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நேற்று அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் மறுக்கவில்லை, இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழல் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நேற்று பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்டபோது, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.
- ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
- பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் யாரும் வர மாட்டார்கள் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதால் இன்று இங்கு வந்துள்ளேன்.
பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது. ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது.
- பா.ம.க. வலிமையான கட்சி.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்தார். இது குறித்து பா.ம.க. கவுரவதலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது கூறியதாவது:-
டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது. 2 பேரும் சுமூகமாக செயல்பட முயற்சி செய்தேன். பா.ம.க. வலிமையான கட்சி. இந்த கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி சோதனையானது டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது எனக்கும் மட்டுமின்றி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்.
- பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
தைலாபுரம்:
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியில் கவுரவத் தலைவராக உள்ள ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அன்புமணி மீது ராமதாஸ் நேற்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து அன்புமணி பா.ம.க.வில் உள்ள பல அணி நிர்வாகிகளை இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பானது சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.
ஆலோசனையில் பங்கேற்குமாறு நிர்வாகிகளுக்கு நேற்று அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆலோசனையில் பங்கேற்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டம் நிர்வாகிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசுவதற்காக ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கேள்வி கேட்பவர்களிடம் என்னவென்று சொல்வது என தெரியவில்லை. நெருக்கடியான சூழலில் மன உளைச்சலில் இருக்கிறோம். மனவேதனை படுகிறோம்.
எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன். பா.ம.க.வில் ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்றார்.
- பல்வேறு கருத்துக்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளதாக சங்கத்தினுடைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சங்கம் மூலமாக 23 டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம்:
திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் சார்பில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று பாட்டாளி மக்கள் கட்சி உருவாவதற்கு காரணமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால செயல் திட்டங்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு பாராட்டு விழாக்கள், சமீபத்தில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளதாக சங்கத்தினுடைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த சங்கம் மூலமாக 23 டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
- 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.
3 நாட்கள் நடைபெற்ற கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில் வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பா.ம.க.வை முழுமையாக தன் வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று டாக்டர் ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க. சமூக நீதிப் பேரவையின் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. டாக்டர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள். 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.
அவரிடம் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டங்களிலும் மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனரே என கேட்ட போது அவர்களும் வருகிற கூட்டத்திற்கு வருவார்கள், வருவார்கள் என 2 முறை அழுத்தமாக தெரிவித்தார்.
- அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்தார் ராமதாஸ்.
- பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி சென்றார்.
பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறுகையில், "ராமதாசுடன் என்ன பேசினேன் என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.
நான் சொன்ன அனைத்தையும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்" என்றார்.
- சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
- பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.
சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:
* அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்
* அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
* 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
என்று தெரிவித்துள்ளார்.
- ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
- ஜி.கே.மணி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சேலம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜி.கே மணி பா.ம.க. கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு, அருள் எம்.எல்.ஏ அவரிடம் நலம் விசாரித்தார். அதே போல கட்சி நிர்வாகிகளும் அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இதற்கு இடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவரிடம் நலம் விசாரித்தார்.
- முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
- தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அன்புமணி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்
திண்டுக்கல்:
பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகிற 21-ந்தேதி தாய்மொழி தினத்தன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதில் வன்னியர்களுக்கு 10½ சதவீத இடஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.
அப்போது மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ஜோதிமுத்து, சிவக்குமார், மணி, திருப்பதி, வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.