search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Mani"

    • ஜி.கே.மணி தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார்.
    • ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார்.

    தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தொண்டை குரல்வளையில் ஏற்பட்டிருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரிடம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட விருக்கும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். நல்லமுறையில் கவனித்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

    ஆபரேசன் முடிய மாலை 3 மணி வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு மாலையில் வருவதாக கூறி சென்றார்.

    • வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி இடஒதுக்கீடு சம்பந்தமாக பேச முற்பட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார். அரசியல் செய்யும் இடம் இதுவல்ல என்று அனுமதி மறுத்தார். இதனால் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் ஜி.கே.மணி, சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-

    வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேச முயற்சி செய்தபோது சபாநாயகர் எங்களை பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. கல்வியில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.

    10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனே விரைந்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
    • தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அன்புமணி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்

    திண்டுக்கல்:

    பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகிற 21-ந்தேதி தாய்மொழி தினத்தன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதில் வன்னியர்களுக்கு 10½ சதவீத இடஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.

    அப்போது மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ஜோதிமுத்து, சிவக்குமார், மணி, திருப்பதி, வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • ஜி.கே.மணி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சேலம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜி.கே மணி பா.ம.க. கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு, அருள் எம்.எல்.ஏ அவரிடம் நலம் விசாரித்தார். அதே போல கட்சி நிர்வாகிகளும் அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இதற்கு இடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவரிடம் நலம் விசாரித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க வில் சாதாரண உறுப்பினராக செயல்படத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயர்ந்து தலைவர் ஸ்தானத்தை அடைந்தவர். கட்சியினருக்கு நம்பிக்கையும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. பா.ம.க.வின் வளர்ச்சிக்காக, தொண்டர்களின் உயர்வுக்காக, தமிழக மக்களின் நலன் காப்பதற்காக பா.ம.க வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றும் பணிக்கு, தலைவராக ஜி.கே. மணி மேற்கொள்ளும் பணி மென்மேலும் வளர, சிறக்க, உயர-நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி பா.ம.க. கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PMK

    சென்னை:

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த வி.ஜி.கே. மணி தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மாவீரன் குரு பரிந்துரைத்ததன் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இரு முறை நீக்கப்பட்டவர். அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நபரான வி.ஜி.கே. மணி, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரான வி.ஜி.கே.மணி, அண்டை மாவட்டங்களான அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று கட்சியின் பெயரால் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.

    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்புரைகளில் அந்த நபர் ஈடுபட்டு வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அவர் கட்சிக் கொடியை காரில் பறக்க விடுவதை ஏற்க முடியாது.

    கட்சிக் கொடியை உடனடியாக காரிலிருந்து அகற்றாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே. மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும், சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்று முதல் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண் டாம்.

    மேலும், வி.ஜி.கே. மணி பற்றி சமூக ஊடகங்களில் எந்தப் பதிவும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK

    கூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாமக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கூவத்தூர் சொசுகு பங்களாவில் இருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ., சரவணன், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்களுக்கு, எடப்பாடி பழனிசாமி பணம், தங்கம் ஆகியவை கொடுப்பதாக கூறினார். எனவே, இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    வேலூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அன்புமணி தலைமையில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது என்று ஜி.கே.மணி கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    வேலூர்:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க. சார்பில் ‘பாலாறு காப்போம், பாசனத்தை பெருக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிரசார பயணம் தொடங்குகிறது. இந்த பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்த பிரசார பயணம் புல்லூரில் தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் சென்று இரவு வேலூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    23-ந்தேதி காலை தாமல் பகுதியில் தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சென்று காஞ்சீபுரத்தில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பிரசார பயணம் அரசியல் ரீதியாக இல்லாமல் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவேண்டி நடைபெறுகிறது. பாலாற்று பகுதியில் ஆந்திர அரசு கட்டும் தடுப்பணைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. காமராஜர் காலத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. அதற்குபிறகு வந்த எந்த ஆட்சியும் பெரிய அணையை கட்டவில்லை. தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன். இதில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோதாவரி, பாலாற்றை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் சரியாக செயல்படுத்தாமல் இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #GKMani #Mukkombu
    திருச்சி:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்டை மாநிலங்களில் நீர் மேலாண்மை மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீர் மேலாண்மை சரியாக செயல்படுத்தாமல் இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. அதனால், கொள்ளிடத்தில் தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக செல்கிறது. கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். மற்ற மாநிலங்களில் விவசாய பரப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.

    காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ளுவதற்கு பதிலாக 40 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். நாளைய சந்ததியினருக்கு ஊற்றுநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. முக்கொம்பில் புதிய அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கட்டப்படும் புதிய அணை பல வருடங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #Mukkombu
    அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss #GKMani
    மதுரை:

    மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

    வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.

    இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.

    வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    கொள்கை சார்ந்த கூட்டணி என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் ராமதாஸ் முடிவு எடுப்பார்.


    மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கூட்டணி அமைப்போம். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம்.

    ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
    ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர லாரி உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். #PMK #GKMani #LorryStrike
    சேலம்:

    சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.கட்சி தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளை நிறைவு செய்து இப்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பா.ம.க.தான் கொள்கையை சொல்கிற கட்சி, மக்கள் பிரச்சனைக்கு போராடுகிற கட்சி, டாக்டர் ராமதாஸ் அவர்களின் நாள்தோறும் அறிக்கை பெரிய வலுசேர்த்து இருக்கிறது. இதெல்லாம் நாளை தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறிகள் என்பது தான் இப்போதைய யதார்த்த நிலையாக உள்ளது.

    வருகிற 27-ந்தேதி அவர் சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று ஜலகண்டாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. 28-ந்தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சேலம் 5 ரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    மேட்டூர் அணை உபரி நீர் சேலம் மாவட்டம் முழுவதும் அரசு பயன்படுத்த வேண்டும். சரபங்கா நதி, வசிஷ்ட நதி உள்ளிட்ட அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் ஏரிகளில் 2, 3 ஆண்டுகள் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது தான் மாவட்டம் செழிக்கும். அரசு காலம் தாழ்த்தக் கூடாது. உடனே இதை நிறைவேற்ற வேண்டும்.

    அரசு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. பருப்பு, அரிசி எந்த பொருட்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை. இதனால் விலைவாசி உயருமோ என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தால் அவர்களை அழைத்து பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #LorryStrike
    ×