என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அன்புமணி மட்டுமே காரணம்- ஜி.கே.மணி குற்றச்சாட்டு
- அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
- அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
சென்னை:
பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜி.கே.மணி கூறியதாவது:-
* அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
* அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.
* அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.
* ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.
* அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.
* என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.
* மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.
* அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
* அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
* அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.
* மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.
* தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.






