என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது - ஜி.கே.மணி
    X

    ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது - ஜி.கே.மணி

    • பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
    • ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு 3 எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்திய நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

    அப்போது, சட்டசபை குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. சட்டசபை குழு தலைவர், கொறடாவாக தாங்களே தொடர்வதாக ஜி.கே.மணியும் அருளும் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் பா.ம.க.வுக்கு வாழ்வு.

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது.

    * ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    * ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×