search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High school"

    • கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்க மணி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேல்நிலை கல்வி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளிகளில் மாணவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.

    மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை தோற்றுவித்து பணி நியமனம் செய்ய வேண்டும். இதே போல கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநிலம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அதன்பின் மாநில தலைவர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் கட்ட போராட்டங்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

    வரும் 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும், இதை அடுத்து சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முதலியார்பேட்டை அர்சுண சுப்புராயநாயக்கர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் தலைமையில் முதலியார்பேட்டை அர்சுண சுப்புராயநாயக்கர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளி மாணவர்களுக்கு வெற்றி செல்வம் இனிப்பு வழங்கி னார். மேலும் தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவ ரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான அறிவிந்த ராஜா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்பட அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கதர் ஆடை அணி வித்து வாழ்த்து தெரி வித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் இன்பசேகர் மற்றும் பா.ஜனதா நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு இணை அமைப்பாளர் ஹரிதாஸ் செய்திருந்தார்.

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
    • அதில் , பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.

    செங்கோட்டை:

    தென்காசி அருகே இலத்தூரில் அரசு உதவி பெறும் லட்சுமி அரிகர உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி மூடப்படு வதா கவும், மாணவ-மாணவிகள் சேர்க்கை நிறுத்தப்படு வதாகவும் பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    லட்சுமி ஹரிஹர உயர்நிலைப் பள்ளியானது கடந்த 1956-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 7 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயர்நி லைப்பள்ளிகள் இல்லாத நிலையில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சிகள். நெடுவயல், கொடிக்குறிச்சி, சீவ நல்லூர், குத்துக்கல் வலசை, கணக்க ப்பிள்ளை வலசை ஊராட்சி களில் இருந்து மாணவ, மாணவிகள் இந்த பள்ளிக்கு வந்து தான் கல்வி படித்து சென்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியரிடம் வரும் கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி செயல்படாது. புதிய மாண வர்கள் சேர்க்கை கூடாது என கூறியதாகவும், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்ட தாகவும் தெரிகிறது. இது ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த கோரிக்கை மனுவின் நகலை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர், மாநில பள்ளிக் கல்வி துறை செயலர், மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

    • நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம், வேப்பூா் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த நடுநிலை பள்ளியில் சுமார் 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 2008-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. அதன்படி நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். உயர்நிலை பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால் மழை, வெய்யில் காலங்களில் நடுநிலை பள்ளி வளாகத்தில் 9,10-ம் வகுப்பு மாணவர்களும் பயின்று வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதியை பயன்படுத்தி கட்டிடம் மற்றும் வசதிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் கிராம சபை கூட்டத்தின் வாயிலாகவும், பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் எங்கள் பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் கிராம மக்களோடு ஒன்றிணைந்து சாலைமறியலில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கவனத்தையும் திசை திருப்பும் வகையில் இது உள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் சாரதாமில் ரோட்டில் செங்கோட்டையன் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளி சுவர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்ட–ப்பட்டு, பள்ளிக்கூடமா? இல்லை சாதாரண கட்டிடமா? என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான அரசியல் கட்சி சுவரொட்டிகள், சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் கோவை கலெக்டர் சுவர்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என்று தெரிவித்து இருந்தார். அதன்படி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவ–டிக்கையும் எடுக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த விதிமுறைகள் இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சுவரொட்டியாகவே காணப்படுகிறது.

    பாலத்தின் தூண்கள், சுவர்கள் என எல்லா இடங்களிலும் சுவரொட்டி ஒட்டி மாநகரின் அழகை குறைத்து வருகின்றனர். தூண்கள், சுவர்களில் ஒட்டியவர்கள் தற்போது பள்ளிக்கூட சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

    பள்ளிக்குள் கல்வி பயில நுழையும் மாணவர்கள், இத்தகைய சுவரொட்டிகளை காணும்போது அவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறகூடிய நிலை காணப்படுகிறது.

    பாலக்காடு ரோடு குனியமுத்தூர் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியின் சுற்று சுவரில் வர்ணம் தீட்டப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்துக் கொண்டு உள்ளே செல்லும் மாணவனுக்கு மனநிலை கல்வி பயில ஏற்றதாக அமைந்திருக்கும்.

    ஆனால் கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் சுவரொட்டிகளை ஒட்டி பள்ளி சுவற்றின் அழகை குலைப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கவன–த்தையும் திசைதிருப்பும் வகையில் இது உள்ளது.

    எனவே கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இணைந்து, பள்ளி சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குனியமுத்தூர் பள்ளியை போன்று அனைத்து பள்ளிகளும் தங்கள் சுற்றுச்சுவரில் திருக்குள் உள்ளிட்டவற்றை எழுதினால் மாணவர்களின் கல்விநிலை இன்னும் மேம்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ரெயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வேபீடர் ரோட்டில் உள்ள ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் விழாவிற்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினார்.நாடார் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் செயலர் விஜயராஜன் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். உறவின்முறை செயலாளர் வெற்றி செல்வன், நாடார் நர்சரி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலர் ஆத்தியப்பன், பொருளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், உதவி செயலாளர் நாகரத்தினம், இணை தலைவர் மதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாள ர்களாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, நாடார் மகாஜனசங்க விருதுநகர் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணகுமார் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பிளஸ்-2 மாணவி நிவேதாதேவி தன்னலமற்ற பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்று சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். உறவின் முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இலக்கிய மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    முன்னதாக பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய மாணவர்படை,நாட்டு நலபணிதிட்டம்,பாரத சாரண-சாரணியக்கம், இளஞ்செ ஞ்சிலுவை சங்க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தின் போது பழைய பேருந்துநிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ெரயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு தினத்தை யொட்டிமாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. 2 போட்டிகளிலும் மொத்தம் 53 போ் கலந்து கொண்டனா்.

    தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இரா.பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் இல. ஜெகதீசன் முன்னிலை வகித்தனா். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6 ஆசிரியா்கள் நடு வா்களாகச் செயல்பட்டனர்.

    பேச்சுப் போட்டியில் நாமக்கல் அரசு மகளிா் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி கோபிகா முதலி டத்தையும், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மிது னாஸ்ரீநிதி 2-ம் இடத்தையும், பாண்டமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி வித்யாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    கட்டுரைப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் சுனில்குமாா் முதலிடம், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி பவித்ரா 2-ம் இடம், பீச்சாம்பா ளையம் விஐபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 3-ம்இடம் பிடித்தனர்.முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

    மாவட்ட அளவில் இவா்களுக்கு விரைவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது

    பூதலூர்:

    பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் தஞ்சை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதுநிலை விரிவுரையாளர் ஜெயராஜ், பூதலூர் ஒன்றிய எண்ணும் எழுத்தும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் செங்குட்டுவன், பூதலூர் வட்டார கல்வி அலுவலர் ரமாபிரபா, உதவி பேராசிரியர் இளையராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பீல்வாடி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்து பீல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அருமடல் ரோட்டில் அய்யனார் கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 160 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கு சமையல் அறையும் கிடையாது. சமையலரும் இல்லை.

    இதனால் இப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அரை கிலோ மீட்டர் தூரம் சென்று மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தினமும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதற்காக சாலை யில் தட்டை கையில் ஏந்திக்கொண்டு தொடக்கப்பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் பள்ளியில் சாப்பிட்டு விட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.

    மாணவ-மாணவிகள் தினமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மழை பெய்யும் போது மாணவ- மாணவிகள் தொடக்கப்பள்ளிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு வருவதால் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் உணவு இடைவேளையில், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதும், படிப்பது, எழுதுவது என்று தங்களது பணிகளை செய்வார்கள். ஆனால் இதை மாணவர்கள் செய்வதற்கு கூட நேரம் இல்லை. மேலும் மாணவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிட்டு வரும் போது விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே சமையல் கூடம் விரைந்து அமைத்து, சமையலரை நியமித்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மாணவர் களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×