என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
- உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தசரா விடுமுறையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், கடந்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
அந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை தினமும் ஒரு வகுப்பு கூடுதலாக நடத்தும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் தினமும் கூடுதலாக ஒரு வகுப்புகளை நடத்தி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
- விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு வசதியாக, கடந்த 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும். செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுகிறது.
- காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன.
- ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந்தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் கூறும்போது, இந்த கல்வியாண்டில் 2-ம் பருவம் அக்டோபர் 6-ந்தேதி அன்று தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60 ஆயிரத்து 960 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 5 ஆயிரத்து 211 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 749 மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.
கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
சென்னை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கக் கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அளிக்கக் கூடிய பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
அந்த வகையில் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.8 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரம் என மொத்தம் ரூ.15 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி விவரம், தற்காப்பு கலை பயிற்சிகள் விவரம், பயிற்சியாளர் விவரம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
- கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!
நன்றி தலைவா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ‘ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
- பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின.
சென்னை:
பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசியல் கட்சியினர் சிலர் திரைப்படத்தை பார்த்து பள்ளிக்கல்வித்துறை சீரழிகிறது என்றும், மாணவ-மாணவிகளுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும் என்றும், உடனடியாக 'ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின. ஆனால் அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அப்படி எந்த உத்தரவையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை எனவும், அது நிறுத்தி வைத்ததாக வரும் செய்தி முற்றிலும் தவறான தகவல் எனவும், 'ப' வடிவ இருக்கை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
- காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும்.
- பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
சென்னை:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு 'வாட்டர் பெல்' அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, காலை மணிக்கு பெல் அடித்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தினர்.






