என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வேன்"

    • பங்கஜ் சர்மாவை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். இதையடுத்து விபத்து நடைபெற்ற பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளது.

    இதனிடையே, விபத்து நடைபெற்ற அன்றே, கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச்சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
    • விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி (16), மாணவர்கள் விமலேஷ் (10), செழியன் (15) ஆகிய 3 பேர் பலியாகினர்.

    கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    இதனிடையே விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த கேட் கீப்பர், லோகோ பைலட், கடலூர், ஆலம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பணியாற்றி வரும் முதுநிலை உதவி லோகோ பைலட், ரெயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய 2 மேலாளர்கள், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ரெயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

    விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரிடம் இன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

    இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர்.

    விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. காலையில் 5 பேர் ஆஜராகி இருந்தனர். மீதமுள்ள 6 பேரும் இன்று மாலைக்குள் ஆஜராவார்கள் எனவும், ரெயில்வே துறை சார்ந்தவர்கள் மீது தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர். 

    • ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்தனர். 

    • ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
    • செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.

    3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர் தூங்கிதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ரெயில் வருவதாக விமல் என்ற அதிகாரி பங்கஜ் சர்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை.

    அவர் தூங்கி விட்டதாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.

    செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் தகவல் தொடர்பாக அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராக 13 பேருக்கு திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    பள்ளி வேன் டிரைவர் சங்கர் உள்பட 13 பேரும் நாளை திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • நிமிலேஷ் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    • ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
    • அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

    ஆனால் இதனை மறுத்த தென்னக ரெயில்வே, விபத்திற்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும் வேன் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக கூறியது. இதற்கு வேன் டிரைவர் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், கேட் கீப்பரை பார்க்கவில்லை. கேட் திறந்தே இருந்தது. ரெயில் வரும் ஒலிக்கூட கேட்கவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், பயணிகள் ரெயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

    • கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
    • ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

    • பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
    • கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    • கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • வேனில் இருந்து 5 பேரில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் அக்கா, தம்பியான சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக இருந்து கேட்கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.

    • மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
    • பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

    Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

    மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

    பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
    • கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.

    இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.

    இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:

    அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .

    ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?

    ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?

    தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?

    தமிழ் தெரியாத கேட் கீப்பர்:

    தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .

    வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.

    ×