என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் விபத்துகள்"
- ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
- கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.
இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:
அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .
ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?
ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?
தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ் தெரியாத கேட் கீப்பர்:
தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .
வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?
கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.
- 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
- 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
* டிசம்பர் 1964 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.
* கடந்த 1981ஆம் ஆண்டு நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரெயில் விபத்து பீகாரில் நடந்தது. பீகார் மாநிலம் பாலகோட்டில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் ரெயில் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. 9 பெட்டிகளுடன் பயணிகள் நெரிசலில் சென்ற ரெயிலின் 7 பெட்டிகள் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 800 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.
* 1981 ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் 3 பயணிகள் ரெயில்கள் ஒரே பாதையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
* 1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரெயில் தடம் புரண்டு தண்ணீரில் விழுந்ததில் 105 பேர் உயிரிழந்தனர்.
* 1995 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது டெல்லி செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.
* 1998 ஆம் ஆண்டு கொல்கத்தா செல்லும் ஜம்மு தாவாய்-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபின் வடக்கு ரெயில்வேயின் கன்னா-லூதியானா பிரிவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட 6 பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.
* 1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கைசல் அருகே இரண்டு அதிவேக ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது இரண்டு ரெயில்களில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்தில் இரண்டு ரெயில்களில் பயணித்த சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
* 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் அதிவேக ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்ச் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பயணிகள் உயிரிழந்தனர்.
* 2005- ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள ஒரு சிறிய ரெயில் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சேதமடைந்த பகுதி அருகே சென்றபோது டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் தடம் புரண்டு 114 பேர் இறந்தனர்.
* 2010-ஆம் ஆண்டு மேற்கு மிட்னாபூரில் உள்ள கெமாஷூலி மற்றும் சர்திஹா அருகே மும்பை நோக்கிச் சென்ற ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் மீது மோதி சுமார் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
* 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
* 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
* 2017-ஆம் ஆண்டு தெற்கு ஆந்திராவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
* 2018-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
* 2023-ஆம் ஆண்டு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
* மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரெயில் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன
- தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.
இந்தியாவில் ரெயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் மக்களின் உயிரிழப்புகளும் தொடர்கதையாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் சுமார் 748 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவலை இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் சமூக செயல்பாட்டாளர் ராஜு வலக்கலா என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.
அதாவது, 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மொத்தமாக 10 ஆண்டுகளில் மொத்தமாக 748 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரெயில்வேயின் பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் விபத்துகளுக்கு ரெயில்வே பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதே காரணம் என்று ராஜு தெரிவிக்கிறார். இதற்கிடையே வந்தே பாரத் சொகுசு ரெயில்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வெகு மக்கள் பயன்படுத்தும் ரெயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தையும் சமூக செயல்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.






