என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் காயம்"

    • இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • நிமிலேஷ் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

    • கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்.
    • வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது.

    கடலூர்:

    கடலூர் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

    சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே இன்டர்லாக்கிங் எனப்படும். கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

    செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, விபத்துக்குள்ளான பள்ளி வேனில் அடுத்த நிறுத்தத்தில் ஏற வேண்டிய பள்ளி மாணவன் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெயில் கேட் திறந்திருந்ததை பார்த்தேன். வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது. கேட் கீப்பர் தான் உறங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரும், ரெயில்வேதுறையில் நிகழும் குறைபாடுகளுமே காரணம் என்று கருதப்படுகிறது. 

    • வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
    • விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்திற்கு கேட் கீப்பரின் அலட்சிமான நடவடிக்கையே காரணம் என கூறி பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். இதையடுத்து கேட் கீப்பரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்ற போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநர் தான் காரணம் என்றும் கேட் கீப்பர் கேட்டை மூட்டத் தொடங்கியது போது, வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.

    இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சங்கரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறிகின்றனர் என கேட்டதற்கு அவர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் விபத்து குறித்து கேட்டதற்கு, கேட் திறந்தே இருந்ததால் தான் பள்ளி வேன் கிராஸ் செய்தது என்றும், ரெயில் ஒலியும் எழுப்பவில்லை என்றும் கூறினார். மேலும் கேட் கீப்பர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.

    • வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
    • வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. இன்று காலை 7.40 மணிக்கு நடந்த இந்த விபத்து பற்றிய தகவல்கள் வருமாறு:-

    கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் கடலூர் சுற்றுப் பகுதி மாணவ-மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுவது வழக்கம்.

    கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் இருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன்கள் அந்த பள்ளிக்கு வருவது உண்டு. இன்று காலை சங்கர் என்ற டிரைவர் தனது வேனில் செம்மங்குப்பத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை ஏற்றிக் கொண்டு வந்தார்.

    அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகவேகமாக சென்று கொண்டு இருந்தார். காலை 7.40 மணிக்கு அவரது வேன் செம்மங்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு வந்தது.

    அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் சங்கர் வேனை தண்டவாளத்தை கடந்து செல்ல ஓட்டினார். ஆனால் அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் மின்னல் வேகத்தில் வந்தது. ரெயில் வந்த சத்தம் கேட்காத நிலையில் தண்டவாளத்தின் மத்திய பகுதி வரை சென்று விட்ட டிரைவர் சங்கர் இதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வேனை ஓட்டி சென்று விடலாம் என்று வேகமாக ஓட்டினார். ஆனால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பயணிகள் ரெயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது.

    வேன் மீது ரெயில் மோதிய சத்தம் அந்த பகுதி முழுக்க கேட்டது.

    மோதிய வேகத்தில் வேனை ரெயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது. வேனுக்குள் இருந்த 3 மாணவர்களும், ஒரு மாணவியும் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

    இதை கண்டதும் பயணிகள் ரெயிலை டிரைவர் நிறுத்தினார். அப்போது அந்த வேன் தண்டவாளம் ஓரத்தில் நொறுங்கி அப்பளமாக சிதறியது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.

    வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ். இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


    வேன் டிரைவர் சங்கர்

    செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். தினமும் காலை நேரம் வேனில் கடலூர் சுற்றுப் பகுதிக்கு சென்று மாணவ-மாணவிகளை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இன்று காலை அவரது வேன் விபத்தில் சிக்கி நொறுங்கி போனது.

    இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளி வேன் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.


    கதறி அழும் பெற்றோர்

    உயிரிழந்த செழியன் மாணவி சாருமதியின் சகோதரர் ஆவார். ஒரே குடும்பத்தில் அக்காவும், தம்பியும் பலியானது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் ரெயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டதால் கேட்டை மூடவில்லை என்று தெரிகிறது. கேட் மூடாததால் பள்ளி வேன் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் இதை தெற்கு ரெயில்வே மறுத்துள்ளது. ரெயில்வே கேட் மூடப்பட்டதாகவும், பள்ளி வேன் டிரைவர் சங்கர் கேட்டுக்கொண்டதால் ரெயில்வே கேட்டை ஊழியர் திறந்ததாகவும் அதனால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.



    • ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர், மாணவர்களை காப்பற்ற சென்ற செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை ஆகியோரை அமைச்சர் சி.வெ. கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவின் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன் ஆகியோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் என்னையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினேன். காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர்களது பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம்.
    • லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் நிவாஸ் மற்றும் சாருமதி என்ற மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தென்னக ரெயில்வே கூறியிருப்பதாவது:-

    உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
    • ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.

    ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின் முழுமையான தகவல்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

    • ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
    • ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.

    ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    இதனிடையே, கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    கேட்டை மூடத் தொடங்கியபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என தென்னக ரெயில்வே கூறியுள்ளது.

    இதனிடையே ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, ரெயில் விபத்து காரணமாக முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் நடுவழியில் நிறத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

    • விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும்.

    கேட் கீப்பர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    செம்மங்குப்பம் அருகே மூடப்படாமல் இருந்த ரெயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் கடக்க முயன்ற நிலையில் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

    எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்ணை துடைத்துக்கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியில் வருவார். விபத்து ஏற்பட்டதும் அழைத்து கேட்டபோது அண்ணா தூங்கிட்டேன் என எழுந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
    • விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.

    ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.



    இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரெயில் மோதியதில் ஆச்சாரியா பள்ளி வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. 



    ×