search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளூர் ஷாநவாஸ்"

    • வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது.
    • த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-

    கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.

    அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.

    வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.

    விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்று கேள்விகள் வருகிறது.
    • எங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் சொல்லவில்லை.

    நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

    கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர், பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் இடம் பெறவில்லை.

    எங்கோ ஒரு மூலையில் ஒரு அதிகாரிகள் செய்யக்கூடிய சிறு தவறு எங்கே போய் முடிகிறது என்று பார்க்க வேண்டும்.

    அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் எப்படி சித்தரிக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

    ஏற்கனவே இந்த கூட்டணியை எப்படியாவது உடைத்து விட முடியாதா? ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி விட முடியாதா? என்று வெளியே இருக்கும் சக்திகள் கண்ணும் கருத்துமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படி இங்கே யாரோ ஒரு அதிகாரி செய்யும் பிழை திட்டமிட்டு இந்த அரசே இப்படி செய்கிறது என்கிற ஒரு தோற்றத்தை கொடுத்து விடும்.

    இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்று கேள்விகள் வருகிறது.

    தேவையில்லாமல் அரசுக்கும் நம்முடைய நிர்வாகத்திற்கும் ஒரு நெருக்கடியை அதிகாரிகள் செய்யும் தவறால் ஏற்பட்டு விடுகிறது.

    சட்டமன்ற உறுப்பினரின் பெயர் என்பது மக்கள் பிரதிநிதியின் பெயர். ஏதோ எங்கள் பெயர் வரவேண்டும் என்பதற்காக நாங்கள் இதை சொல்லவில்லை.

    பேனர் வைப்பதால் எங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைத்து விடப்போவதில்லை. அப்படி ஒரு புகழ் வெளிச்சத்திற்கான தேவையும் எங்களுக்கு தேவை இல்லை.

    எங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் சொல்லவில்லை. அதற்கு பின்னால் இருக்கக்கூடிய சுயமரியாதை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இது அரசுக்கு இழுக்கை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய, அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய செயலை ஏதோ ஒரு மூலையில் இருந்து செய்துவிட்டு போகிறீர்கள்.

    அது தேவையில்லாமல் வேறு வேறு வகையில் எதிரொலிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு, இனிமேல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தால் நெறிமுறை பின்பற்றுங்கள்.

    இனிமேல் இதுபோல் தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு.
    • சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக Vs அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம். அதற்கு முரணாகவே நடக்கிறது அதிமுக.

    பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பளித்து இன்றும் களத்தை இழக்கிறது. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது.
    • ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே.

    இன்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, "ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது. உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம்

    ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்று பேசியுள்ளார்.

    மோடியின் இக்கருத்து ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதில் அளித்து பேசியுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் பூரண நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் தான் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமர் மோடிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால் எனக்கு போன் செய்து விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே மோடியின் பேச்சு தொடர்பாக விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என மோடி பேசியுள்ளார். முதலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே அதற்கு மோடி பதில் சொல்வாரா? ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×