search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naveen Patnaik"

    • ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
    • சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இங்கு மே மாதம் 13-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 4 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநில முதல்-மந்திரியும், பிஜூ ஜனதாதள கட்சி தலைவருமான நவீன்பட்நாயக் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். தொடர்ந்து 5-வது முறையாக அவர் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

    இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் இரு கட்சிகள் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என அம்மாநில தலைவர் அறிவித்தார்.

    இதையடுத்து அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் 15 பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் மற்றும் 72 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் நவீன்பட்நாயக் தொடர்ந்து 6-வது முறையாக ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஏற்கனவே இவர் 5 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5-வது தடவையாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். நீண்ட நாள் முதல்-மந்திரியாக இருந்து வருபவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    தற்போது மீண்டும் அவர் ஹிஞ்சிலி தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார்.

    இக்கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னாள் மனிதவள தலைவராக இருந்த சாண்ட்ரூப் மிஸ்ரா போட்டியிடுகிறார். விருப்ப ஓய்வு பெற்ற அவர் பிஜூ ஜனதாதள கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 3 முறை எம்.எல்.ஏவாகவும், மந்திரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் பூரி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ரவுத்ரே மகன் மன்மத் ரவுத்ரே புவனேஸ்வர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    • 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதா உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 21 தொகுதிகளை கொண்ட மக்களவைக்கும், 147 இடங்களை கொண்ட சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    2009-க்கு பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இரு கட்சி தலைவர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    147 சட்டமன்ற இடங்களில் 100 இடங்களுக்கு மேல் பிஜு ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது. ஆனால் பா.ஜனதா அதிக இடம் கேட்கிறது.

    அதேவேளையில் 21 மக்களவை இடங்களில் 14-ல் பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. பா.ஜனதாவின் இந்த கோரிக்கையை ஏற்க பிஜு ஜனதா தளம் மறுத்துவிட்டது.

    மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் அவர் கூறுகையில் "கூட்டணி குறித்து பேசவில்லை. ஒடிசா தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் இறங்க போகிறது. டெல்லியில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றம் தேர்தலுக்கான எங்களுடைய தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. எங்களுடைய பலத்துடன் தனியாக நிற்போம்" என்றார்.

    கடந்த மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜனதா 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

    • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
    • நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.

    புவனேஷ்வர்:

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:

    உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.

    உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை தொடங்க ஒடிசா அரசு முடிவு.
    • கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் 63 பேருந்துகள் இயக்கம்

    ஒடிசா மாநிலத்தில் கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை (லட்சுமி பேருந்து சேவை) தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதன் முதல்கட்டமாக கோரபுத் மாவட்டத்தில் இந்த சேவையினை ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்து அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ- மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்த பஸ் சேவையால் கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
    • வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதையடுத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இன்று இணைந்தார்.

    • நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு ‘5டி செயலாளர்’ என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
    • நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அரசுத்துறைகளில் மாற்றத்துக்கான முயற்சிகளை அமல்படுத்த இப்பதவி உருவாக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அரசு திட்டங்களை ஆய்வு செய்ய வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

    மாநில அரசை நவீன் பட்நாயக்குக்கு பதிலாக, வி.கே.பாண்டியன்தான் நிர்வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவும் வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில், பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    அதன்படி, வி.கே.பாண்டியன், அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.

    இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரம் முடிவதற்குள் வி.கே.பாண்டியனை ஒடிசா மாநில அரசு புதிய பதவியில் நியமித்துள்ளது. இது, கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நவீன ஒடிசா திட்டத்துக்கான தலைவராக கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்-மந்திரியின் கீழ் நேரடியாக செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநில அரசின் 'நமது ஒடிசா, புதிய ஒடிசா' என்ற புதிய திட்டத்தின் பொறுப்பாளராகவும் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட உள்ளார். இத்திட்டம், பாண்டியனின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.

    வி.கே.பாண்டியன், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தில் இணைவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்மூலம், அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    • இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
    • ஒடிசா அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிற்கு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடிதம் எழுதினார்.

    அப்போது, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
    • 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    • ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.

    இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    • அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
    • ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் கார் வைத்துள்ளார்.

    புவனேசுவரம் :

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.

    2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:-

    * முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.

    * அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும்.

    * அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது.

    * ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது.

    * ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.

    * ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும்.

    நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

    ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    • நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
    • ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

    புவனேஸ்வர் :

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.

    இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    • மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.

    அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

    நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.

    ×