என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey World Cup"

    • நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
    • 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.

    ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    • சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
    • மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    ரூர்கேலா:

    15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று ஒடிசாவில் தொடங்குகிறது. ரூர்கேலா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவைகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால் இறுதியில் தேர்வாகும்.

    தொடக்க நாளான இன்று 4 ஆட்டங்கள் நடக்கிறது. பகல் 1 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா (ஏ பிரிவில்) மோதுகிறது. மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், மன்தீப்சிங், அமித் ரோகிதாஸ், ஆகாஷ் தீப்சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி வெற்றி முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஸ்பெயின் அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் வீணடித்தது.
    • இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    ரூர்கேலா:

    உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    12வது நிமிடத்தில் துணை கேப்டன் அமித் ரோகிதாசும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். அதன்பின்னர் இரு தரப்பிலும் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த நிலையில், அதில் ஒன்றை ரோகிதாஸ் கோலாக மாற்றினார். இதேபோல் ஸ்பெயின் அணி மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. ஆனால் அனைத்தையும் வீணடித்தது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.  ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    • தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான்.
    • இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது. 2010ல் டெல்லியிலும், 2018ல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும் போட்டியை நடத்தியது.

    இந்தியாவுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து பெல்ஜியம் ஹாக்கி வீரர் எலியட் வான் ஸ்ட்ரைடாங்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் மூன்று தொடர்களை ஒரே நாட்டில் விளையாட விளையாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது எப்படி சாத்தியம்? இந்தியா இந்த முறையும் போட்டியை நடத்துவது வருத்தமளிக்கிறது.

    ஆனால், தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். பருவநிலை போட்டியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹீரோ அல்லது ஒடிசா போன்ற உலகளாவிய ஸ்பான்சர்கள் உள்ளனர். போட்டியை நடத்தும் நாடு குறித்த தேர்வானது, நிதி ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் விளையாட்டைப் பொருத்தவரை நியாயமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நேற்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    • கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

    ரூர்கேலா:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது.

    இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணிவேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது. 

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
    • பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.

    • கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.

    இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.

    • லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன.
    • காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி தனது (டி பிரிவு) கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர் சிங் 21வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த வேல்ஸ் அணி 42 மற்றும் 44வது நிமிடங்களில்கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கியது.

    அதன்பின்னர் ஆகாஷ்தீப் சிங் 45வது நிமிடத்தில் அசத்தலான பீல்டு கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. 59வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணியால் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

    லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்றில் (கிராஸ்ஓவர் போட்டி) விளையாட உள்ளது. காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்
    • குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும் பெற்றன.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஏ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும்  ஆக்ரோஷமாக முன்னேறினர். 

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தன.  எனவே,  5-5 என போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த போட்டி முடிவில் குரூப் ஏ பிரிவில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் அடிப்படையில் குரூப் ஏவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும், பிரான்ஸ் 3வது இடமும், தென் ஆப்பிரிக்கா 4வது இடமும் பெற்றன.

    ×