search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? ஸ்பெயினுடன் இன்று மோதல்
    X

    உலக கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? ஸ்பெயினுடன் இன்று மோதல்

    • சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
    • மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    ரூர்கேலா:

    15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று ஒடிசாவில் தொடங்குகிறது. ரூர்கேலா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவைகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால் இறுதியில் தேர்வாகும்.

    தொடக்க நாளான இன்று 4 ஆட்டங்கள் நடக்கிறது. பகல் 1 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா (ஏ பிரிவில்) மோதுகிறது. மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், மன்தீப்சிங், அமித் ரோகிதாஸ், ஆகாஷ் தீப்சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி வெற்றி முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×