search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha election"

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது.
    • தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "2026ம் ஆண்டில் வெற்றி நமதே. மன உறுதியுடன் இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை.

    வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்று தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை.

    இந்தத் தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம். ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது.

    மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் சளைக்காமல் களப்பணியாற்றிய உங்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    உங்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உங்கள் உழைப்புக்கு இப்போது பயன் கிடைக்கவில்லை என்றாலும் இரு ஆண்டுகளில் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. காரணம்... இந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல.

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவு படுத்தியிருந்தோம். பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் நான் வீறுநடை போட வேண்டும்.

    2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன. ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு வங்கி 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட 7 விழுக்காடு குறைந்திருக்கிறது. ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட, அந்தக் கட்சியால் 2019-ல் பெற்ற வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை.

    இன்னும் கேட்டால் 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    இதை அனைவரும் உணர வேண்டும்; மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். அதைத் தான் பா.ம.க. செய்யப்போகிறது.

    தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு மிக நியாயமானது தான். தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான் என்றாலும் கூட, அதன் வளர்ச்சிக்காக 57 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழவோ, நடமாடவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    மாறாக, ராஜாஜி, உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டு, காமராசர், அண்ணா போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த மதுவிலக்கு அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் தான் சிதைக்கப்பட்டது.

    அதன் விளைவு பள்ளிக்குழந்தைகள் கூட மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றையும் கடந்து கொள்கை வகுப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய அரசு, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம், அதிக அளவில் மதுவை விற்பதன் மூலமும் வருவாய் ஈட்டி, அதைக் கொண்டு அடிப்படைச் செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது பேரவலமாகும்.

    மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் ஆசிரியர்களைத் தாக்கு அவலம் நிலவுகிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.

    இன்னொருபுறம் ஆற்று மணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது.

    அரசு பள்ளிகளில் தரமானக் கல்வியையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கூட அதிமுக, திமுக அரசுகளால் வழங்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவாக குன்று போல நின்று ஆதரவளித்து வந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது வெறுப்பு மற்றும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் உள்ளிட்ட ஏராளமான உரிமைகளை திமுக, அதிமுக அரசுகள் பறித்து விட்டன. அதற்கு பழிவாங்க அவர்களும் காத்திருக்கின்றனர்.

    திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்துச் சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாட்டாளி மக்கள் கட்சியிடம் தான் உள்ளது.

    தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து தான் ஒலிக்கும். மதுவிலக்கில் தொடங்கி நீர்மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அண்மையில் மக்கள் விழிப்புணர்வு பெற்ற காலநிலை மாற்றம் வரை அனைத்து சிக்கல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி என்ன சொல்கிறதோ, அதையே மற்ற அனைத்துக் கட்சிகளும் சொல்கின்றன.

    அந்த அளவுக்கு தமிழக நலனையும், மக்கள் நலனையும் காப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது.

    இதையெல்லாம் உணர்ந்து தான் 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு ஏற்ற வகையில் 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது.

    தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி என்பதாகவே உள்ளது.

    இத்தகைய சூழலில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயலாமல் இருப்பது கடமை தவறிய செயலாக அமைந்து விடும். அந்தத் தவறை பா.ம.க. செய்யாது.

    தமிழ்நாட்டு அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது; மக்கள் நம்மை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்துவதற்கு காத்திருக்கிறேன். 2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம் சொந்தங்களே.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புபில் தகவல்.
    • எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது.

    இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறின.

    ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வென்றோம்.

    அதே போல இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.

    • கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம்.

    பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதற்கட்டமாக தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல், ஜூன் 1ம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.

    இதைதொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
    • 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.

    நேற்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

    58 தொகுதிகளில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக விவரங்கள் :

    பீகார் - 52.2 சதவீதம்

    டெல்லி - 57.67 சதவீதம்

    அரியானா - 60.4 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர் - 54.3 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 63.76 சதவீதம்

    ஒடிசா - 69.56 சதவீதம்

    உத்தர பிரதேசம் - 54.03 சதவீதம்

    மேற்கு வங்கம் - 79.47 சதவீதம்

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக பீகார் - 52.24 சதவீதம், டெல்லி - 53.73 சதவீதம், அரியானா - 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் - 61.41 சதவீதம், ஒடிசா - 59.60 சதவீதம், உத்தர பிரதேசம் - 52.02 சதவீதம், மேற்கு வங்கம் - 77.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, 6ம் கட்ட தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.

    • பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலிகான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    இந்நிலையில் இந்திய குடியுரிமை இல்லாததால் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

    பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் அமெரிக்கா குடியுரிமை காரணமாக நடிகர் இம்ரான் கான், சன்னி லியோன் மற்றும் இலங்கை குடியுரிமை காரணமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் போர்த்துகீசிய குடியுரிமை காரணமாக இலியானா ஆகியோர் வாக்களிக்க வில்லை.

    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தல் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்களிப்பு மையத்தில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி ஆகியோர் தனது மகனுடன் வந்து வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளின் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வாக்களித்துள்ளனர்.

    நடிகை சோனாக்ஷி சன்ஹா அவரது தாய் பூனம் சின்ஹாவுடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    நடிகை அனன்யா பாண்டே, சுங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோர் மும்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    ஆதித்யா பிர்லா குழுவின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும், அவரது மகள் அனன்யா பிர்லாவும் வாக்களித்தனர்.

    நடிகர் அமீர் கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தனது வாக்கினை செலுத்தினார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருடன் வந்து வாக்களித்தார்.

    நடிகை தமன்னா மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிறகு அவர் கூறுகையில், " அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வகமாக உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அதிகளவில் மக்களவை பார்க்க முடிகிறது. வாக்களிப்பது நமது கடமை" என்றார்.

    • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
    • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

    அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

    எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

    இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
    • மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் தேர்தலில் இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. 26-ந்தேதி நடந்த 2-வது கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது.

    கடந்த 7-ந்தேதி 3-வது கட்டமாக தேர்தல் நடந்த 94 தொகுதிகளில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 13-ந்தேதி 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவானது.

    மொத்தத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்நிலையில், அடுத்ததாக வருகிற திங்கட்கிழமை 5-வது கட்ட தேர்தலும், 25-ந்தேதி 6-வது கட்ட தேர்தலும் ஜூன் 1-ந்தேதி 7-வது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் 49 தொகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது.

    பீகார், ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் ஓய்வு பெற்றது.

    தொடர்ந்து, நாளை மறுநாள் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்படும். பின்னர், வரும் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    • 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இன்று (மே 13) நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 63.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஆந்திர பிரதேசம் - 68.20 சதவீதம்

    பீகார் - 55.92 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர் - 36.88 சதவீதம்

    ஜார்கண்ட் - 64.30 சதவீதம்

    மத்திய பிரதேசம் - 69.16 சதவீதம்

    மகாராஷ்டிரா - 52.93 சதவீதம்

    ஒடிசா - 64.23 சதவீதம்

    தெலங்கானா - 61.59 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் - 58.02 சதவீதம்

    மேற்கு வங்காளம் - 76.02 சதவீதம்

    • 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மணி நேர விலவரப்படி 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 4th phase ,parliamentary election , percent polling , Loksabha election , பாராளுமன்ற தேர்தல் , மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் ,

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

    மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

    மாலை 5 மணி நேர நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ஆந்திரா- 68.04 சதவீதம், பீகார்- 54.14 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 35.75 சதவீதம், ஜார்கண்ட் 63.14 சதவீதம், மத்திய பிரதேசம் 68.01 சதவீதம், மகாராஷ்டிரா 52.49 சதவீதம், ஒடிசா 62.96 சதவீதம், தெலங்கானா61.16 சதவீதம், உத்தர பிரதசேம் 56.35 சதவீதம், மேற்குவங்கம் 75.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மணி நேர நிலவரப்படி 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ×