search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலில் காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைப்பது கூட சந்தேகம் தான்- மம்தா பானர்ஜி
    X

    தேர்தலில் காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைப்பது கூட சந்தேகம் தான்- மம்தா பானர்ஜி

    • பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
    • இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

    மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.

    காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

    காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×