என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கிம்"
- முதலமைச்சர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
- முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரங்போ மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு மூக்கில் திடீரென ரத்த கசிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முதல்வர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்து சிகிச்சைக்காக கேங்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதித்யா கூறுகையில்,
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்ட வரலாறு இருந்தாலும், சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
மேலும் சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
- இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்த பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவும், குழந்தையைப் பெற்றிருப்பதும் அவசியமாகும்.
- சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
- லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.
காங்டோக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்டோரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
- மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிக்கிமின் சத்தானில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.
பலத்த மழைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
உடனடி மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவுகள் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அசாமில் உள்ள பல முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
- சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு.
- முக்கிய சாலை தடைபட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில பெய்யும் இடைவிடாத மழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலை தடைப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் மங்கன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் டீஸ்ட்லா ஆற்றில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயம் அடைந்தனர். 8 சுற்றுலாப் பயணிகள் மாயமானார்கள். கனமழையால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வடக்கு சிக்கிம் பகுதிகளுக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மிசோரம் ஆகியவற்றில் கனமழை பெய்து வருகிறது. சிக்கிமில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு கணிசமான அளவு பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக டீஸ்டா அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், தலைநகர் கௌஹாத்தி உட்பட அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததால் நேற்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழையானது பெய்து வருகிறது.
- பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.
- நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.
சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இறந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி ஆவார். 23 வயதான சஷாங்க் திவாரி, இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது.
நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார்.
பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.
மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கி கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
- சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுங்டாங்.
- அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்டாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவிப்பதாகவும், பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் தங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லாச்சென்-சுங்தாங் சாலையில் முன்ஷிடாங்கிலும், லாச்சுங்-சுங்தாங் சாலையில் லெமா பாப் பகுதியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (ஏப்ரல் 25), சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியைப் பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். லாச்சுங் மற்றும் லாச்சென் நகரங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
- பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, 13 வருட இடைவெளிக்குப் பிறகு மூன்று நாள் பயணமாக இன்று காலை சிக்கிம் வந்தார்.
இவர், மூன்று நாள் பயணத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தங்கியிருக்கும் போது "போதிசத்துவர்களின் முப்பத்தி ஏழு நடைமுறைகள்" பற்றிய போதனைகளை வழங்குகிறார்.
கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை 10.30 மணியளவில் தரையிறங்கிய தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
அவருக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் 'ஷெர்பாங்' எனப்படும் நடனம் மற்றும் பிரார்த்தனையின் பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.
இதைதொடர்ந்து, தலாய் லாமாவிடம் ஆசி பெற பல்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று காங்டாக் எஸ்பி டென்சிங் லோடன் லெப்சா தெரிவித்தார்.
தலாய் லாமா கடந்த 2010ஆம் ஆண்டு சிக்கிம் சென்றிருந்தார். அதன் பிறகு, கடந்த அக்டோபரில் சிக்கிம் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும் வெள்ளம் காரணமாக தலாய் லாமாவின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
- ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
- சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்
32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
2019 பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது .
இந்நிலையில், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
அதில், சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா உணவகம்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்
* அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு நேற்று (ஜூன் 1) கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா, ஒரிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது,
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019 தேர்தலில் 82.17 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கந்து, துணை முதலமைச்சர் சவ்னா மெய்ன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பபெற்று பாஜக ஆட்சியமைத்திருந்தது . மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். சிக்கிமில் இந்த தேர்தலில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






