என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் வீரமரணம்"

    • பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி ஆவார். 23 வயதான சஷாங்க் திவாரி, இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார்.

    பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கி கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார். 

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #KupwaraEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் கச்சூ கிராமத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ராம் பாபு சஹாய் என்ற ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறியும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #KupwaraEncounter
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போராட்டத்தில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.#MilitantsInfiltrate
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் தங்டார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலின் போது ராணுவ வீரர் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஊடுருவலை தடுத்து நிறுத்திய போரில் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    ×