என் மலர்
இந்தியா

சக வீரரை காப்பாற்றும் முயற்சியில் இளம் ராணுவ வீரர் உயிரிழப்பு.. பணியில் சேர்ந்த 6 மாதத்தில் சோகம்
- பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.
- நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.
சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இறந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி ஆவார். 23 வயதான சஷாங்க் திவாரி, இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது.
நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார்.
பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.
மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கி கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.






