என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jammu kashmir"

    • 1992ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏரி முற்றிலும் சிதைந்துபோனது.
    • பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹராமுக்த் மலை அடிவாரத்தில் இருந்து பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகர் வரை 24 கி.மீ. தூரத்திற்கு (200 ச.கி.மீ.) வுலார் என்ற ஏரி பரந்து விரிந்துள்ளது.

    இந்த ஏரி சுத்தமான நீரை கொண்ட 2ஆவது ஆசிய ஏரி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஏரியில் தாமரை பூத்துக் குலுங்கும். போர்வை போர்த்தியது போல் ஏரி காட்சி அளிக்கும். இந்த ஏரிக்கு கடந்த 1992ஆம் ஆண்டு சோதனை ஏற்பட்டது.

    கடந்த 1992ஆம் ஆண்டு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரி அதன் உருவத்தை இழந்தது. ஏரி முழுவதும் வண்டல் மண்ணால் சூழப்பட்டது. இதனால் தாமரை மலர்களும் அழிந்துபோனது. பல்வேறு அமைப்புகள் மீண்டும் தாமரை மலர்கள் வளர முயற்சி மேற்கொண்டன. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    ஏரியில் உள்ள வண்டல் மணல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமரை விதைகள் தூவப்பட்டன. தற்போது தாமரை பூத்துக் குலுங்கி காட்சி அளிக்கின்றன. சுமார் 30 வருடங்கள் கழித்து தாமரைகள் ஏரியை போர்வையால் போர்த்தியபோல் காட்சி அளிக்கின்றன.

    • பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது.
    • பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.

    ஸ்ரீநகர்:

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.

    இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.

    இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய அடைகிறேன் என தெரிவித்தார்.

    அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
    • தீ விபத்தில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    ஸ்ரீநகர்:

    ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.

    தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது
    • இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செனாப் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், கத்ரா- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காகவும் அம்மாநிலம் சென்றுள்ளார்.

    கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * பாகிஸ்தான் மனித நேயம், சுற்றுலா, காஷ்மீரிகளின் "rozi-roti"-க்கு எதிரானது, அதனால்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது

    * பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது.

    * காஷ்மீர் மக்களின் வருமானத்தை நிறுத்துவதற்கான பாகிஸ்தான் சதிதான் பஹல்காம் தாக்குதல்.

    * இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

    * பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் பெயரை கேட்கும் போதெல்லாம், அவமானகரமான தோல்வியை நினைவு கூறும்.

    * பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் அதிக அளவில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். சிறிய அளவில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.
    • பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

    இந்நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

    பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

    முன்னதாக கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகருக்குச் சென்ற ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.
    • பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ராகுல்காந்தி 2-வது முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளார்.

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி நாளை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.

    அங்கு பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கிறார். பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ராகுல்காந்தி 2-வது முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளார்.

    அவர் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகருக்குச் சென்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    • விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.

    ஸ்ரீநகர்:

    தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

    இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.

    இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:

    அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.

    அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.

    • முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு.
    • ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்த பணியை வழங்கினால், வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

    ஜம்மு-காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் நிலையான காவலர் பணிக்கு (static guard duties) சுமார் 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    உமர் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முஃப்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

    நமது முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கை கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த நிலையான காவலர் பணிக்குஅ ராணுவ நிபுணத்துவம் தேவையில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

    மேலும், இந்தக் கொள்கை நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்யத் தவறும் ஒரு குறுகிய கால பாதுகாப்பு தீர்வாகக் கருதப்படலாம். உள்ளூர் இளைஞர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்பையும் வளர்க்கும்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
    • ஸ்ரீநகர் உள்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில், காஷ்மீரில் நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

    தலைநகர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மதியம் 12.49 மணிக்கு சென்று சேர்ந்தது.

    விமான சேவை சீரானதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குப் படையெடுப்பார்கள் என்பதால், அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
    • பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.

    பின்னர், சண்டை நிறுத்தத்தை இருநாடுகளும் அறிவித்த நிலையிலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டைவிட்டு வெளியேறினர்.

    பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

    பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது வீடு திரும்பலாம் என ஜம்மு- காஷ்மீர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், "பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது
    • ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 

    • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
    • இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கிஅழித்தது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு மையம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டன.

    பதான்கோட், அக்னூர், பாராமுல்லா, அவந்தி நகர், அவந்திபோரா, பெரோஸ்பூர் உள்ளிட்ட 14 நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையடுத்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    பெரோஸ்பூரில் வீசப்பட்ட டிரோன் தாக்கியதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றின. இதில் காயமடைந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    ×