என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் முறையாக... ரஞ்சி டிராபி தொடரில் புதிய சாதனை படைத்த ஜம்மு காஷ்மீர் அணி
- ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜம்மு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதிப் குமார் 146 ரன்கள் குவித்தார். ஜம்மு அணி தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் தரப்பில் முகமது சமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
26 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய பெங்கால் அணி 99 ரன்னில் சுருண்டது. ஜம்மு அணியில் நபி தார், சுனில் குமார் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஜம்மு அணி களமிறங்கியது.
அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் 24-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது உத்தரகாண்டை எதிர்கொள்கிறது.






