search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலச்சரிவு"

    • நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின.
    • தமிழகத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா சிரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின. அப்போது அங்கு தேநீர் குடிப்பதற்காக சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி டிரைவர்களும் இதில் சிக்கிக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் 3 பேர் உள்பட 12 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினார்கள். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்ணண்ன் உடல்கள் மீட்கப்பட்டன.

    கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுன், ஓட்டலில் வேலை பார்த்த ஜெகநாத், கோகர்ணாவை சேர்ந்த லோகேஷ் ஆகியோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த கியாஸ் டேங்கர் லாரி டிரைவரான சரவணன் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும், கடந்த 16-ந்தேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உறவினர்கள் அங்கோலா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    தற்போது நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    நிலச்சரிவில் டேங்கர் லாரி, மரக்கட்டைகள் லோடு ஏற்றி வந்த லாரி ஆகியவை அருகில் ஓடும் கங்காவளி ஆற்றுக்குள் தள்ளப்பட்டு அடித்து செல்லப்பட்டன. கியாஸ் டேங்கர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு லாரியை தேடும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் கங்காவளி ஆற்றில் கேரளாவை சேர்ந்த அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்ற லாரி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்களுக்கு பிறகு அந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 அடி தூரத்தில் கங்காவளி ஆற்றுக்குள் அந்த லாரி கிடக்கிறது. எனினும், டிரைவர் அர்ஜுன் லாரியில் சிக்கி உள்ளாரா? அல்லது ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது ஆற்றில் இருந்து லாரியை தூக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    இதனிடையே அர்ஜூனின் தாயார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனது மகனை மீட்டு தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    மேலும் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இது தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பேசியுள்ளார். கேரளாவில் இருந்து மீட்பு குழுவும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் கதி என்ன? என தெரியவில்லை. மாயமான 4 பேரின் உடல்களும் கங்காவளி ஆற்றில் கிடக்கலாம் என்பதால், தேடுதல் பணியில் அதிநவீன ஆளில்லாத விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    அதாவது அந்த ஆளில்லாத விமானம், நீருக்கு அடியில் 20 கிலோ மீட்டர் அடியில் உள்ள பொருட்களையும் கண்டறியும் திறன் கொண்டதாகும். அதன்மூலம் டெல்லியை சேர்ந்த நிபுணர்கள் கங்காவளி ஆற்றில் 4 பேரையும் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 44 துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரகன்னடா மாவட்ட கலெக்டராக தமிழகத்தை சேர்ந்த உமா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் உத்தர கன்னடாவில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன.

    இதற்கிடையே, உத்தர கன்னடாவில் ஏற்கனவே பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழையால் அங்கு 92 வீடுகள் இடிந்தன. உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.

    இந்நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் மண்ணில் புதைந்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின.

    மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரை மீட்புக்குழு மீட்டது. மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

    • திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
    • நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.

    காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.

    • பத்ரிநாத் நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • இதனால் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    டேராடூன்:

    வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் பலர் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதை உள்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜோஷிமத் நகரத்திற்கு 1 கிலோ மீட்டர் முன் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்மூலம் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இமயமலைக்குச் செல்லும் ஒரே சாலையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாளை காலைக்குள் நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். சாலைகளைச் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
    • 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை  சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

     

     

    • தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
    • அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.

    இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.

    ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

    • கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன.

    இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

    விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • ஒவ்வொரு வருடம் பருவமழை நேரத்தில் பித்தோராகரில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    • நிலச்சரிவு தொடர்பான வீடியோ பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின் போதும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால், தார்ச்சுலா பகுதி முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பித்தோராகரின் தார்சூலாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரோங்டி நாலா அருகே தவாகாட் சாலை முடங்கியது. சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டின் பருவமழை காலத்தில் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு பருவமழைக்கு மாநில அரசின் தயார்நிலை குறித்து பல இணையதளவாசிகள் கேள்விகளை எழுப்பினர்.

    இது குறித்து, "ஒவ்வொரு வருடம் பருவமழை நேரத்தில் பித்தோராகரில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான பிரச்சனையாக இருப்பது, குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல, பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    தற்போதைய நிலச்சரிவு தொடர்பான வீடியோ பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது. மேலும், இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • கனமழையால் நேற்று மட்டும் சீனாவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நூற்றுக்கணக்கான பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிரமான மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

    சீனாவில் ஃபுஜ்ஜியான் மாகாணத்தில் மழைக்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை காணவில்லை. மீட்புக்குழு அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த கோவில் மண்ணில் புதைந்ததை கண்டுபிடித்தினர். அந்த கோவில் இடிபாட்டிற்குள் ஆறுபேர் உடல் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

    கனமழை காரணமாக வீட்டில் இருந்து உயரமான பகுதியில் இருந்து கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக கோவில் மண்ணில் புதைந்தபோது இவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    நேற்று குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக 47 பேர் உயிரிழந்தனர். கனமழை காரமாக 100-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளைநிலைங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. புறநகர் டவுன்பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்த ப்ரோதிம் தாஸ் தெரிவித்துள்ளார்.

    • கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
    • மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இது கனமழையாக மாறி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது.

    நேற்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் சுமார 1½ மணி நேரத்திற்கு விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    வெள்ளமாகச் சென்ற வீடுகள், வயல்வெளிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் தாழநாடு மூன்நிலவு அருகே உள்ள சோவ்வூர் மற்றும் மேலுகாவு கிழக்க மட்டம் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் மேலுகாவு தாலுகாவில் வீடுகள் சேதம் அடைந்தன. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் கல்லம்பாக்கம் என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    கொச்சி துறைமுகம் பகுதியில் கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி காயம் அடைந்தார். இதேபோல், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் நின்ற ஒரு பஸ்சின் மீதும் மரம் விழந்தது. மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம் முதலப்பொழி கடலில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆபிரகாம் ராபர்ட் (வயது 60) மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிள்ளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முக்கோலத்தை சேர்ந்த அசோகன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சிலை ஆறு, திருவனந்தபுரம் கிள்ளியாறு போன்றவற்றில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    ×