search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus crash"

    • பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.

    மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே டூடவாலா- எடியா சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    கேமரூனில் தெற்கு நகரமான எசேகா நோக்கி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணல் ஏற்றிச் செல்லும் கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.

    பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மத்திய ஆப்பிரிக்க நாட்டில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 1,500 பேர் விபத்துகளில் இறக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.

    வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    மேற்கு சூடானில் பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SudanAccident
    கர்த்தூம்:

    சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் இருந்து புறப்பட்டு வந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த பழுதான லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.



    இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன்  மாநிலம் இடையே  உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் சாலையில் நடந்தது.

    இது குறித்து உம் கட்தா காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயமடைந்தவர்கள் எண்ணிக்கை முழுமையாக தெரியாத நிலையில், மீட்கப்பட்டோர்  அருகே உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து நெரிசலில் அதிகம் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் சூடானும் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் மோசமான வாகனம் அகற்றும் அமைப்பு ஆகியவை காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளில் வேகத்தை கண்காணிக்க ரேடர்களை நிறுவுதல் போன்ற  புதிய திட்டங்களை வகுத்து வருவதாக உள்துறை மந்திரி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. #SudanAccident

    கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Canada #Ottawa #BusCrash
    ஒட்டாவா:

    கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதியது.



    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆவர். ஒருவர் பஸ்சில் பயணம் செய்தவர்.

    மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Canada #Ottawa #BusCrash 
    செஞ்சி அருகே அரசு பஸ் பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி அருகே அரசலாபுரத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜிம்பாப்வே நாட்டில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Zimbabwe #BusAccident
    பஸ்சில் தொங்கியபடி சென்ற வாலிபர் சுங்கசாவடி தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை பெரியகடை வீதியை சேர்ந்தவர் குமார். டெய்லர். இவரது மகன் கார்த்தி (வயது 18). இவர் தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்தார். 

    தினமும்பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். பஸ்சில்  கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

    பஸ் இன்று காலை 9 மணியளவில் கந்தவர்க்கோட்டை புதுநகர் அருகே உள்ள சுங்கசாவடியை கடந்து சென்றது. அப்போது கார்த்திக்கின் தலை எதிர் பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கார்த்தி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கார்த்தி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    ×