என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு படையினர்"
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (எல்.ஓ.சி.) பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
- காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
- பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) மோதல் ஏற்பட்டது.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்ரூவின் குச்சல் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை பிடிக்க கூடுதல் படையினர் அனுப்பப்பட்டனர்.
முன்னதாக உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் பகுதியின் தொலைதூர பிஹாலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒரு வாரத்திற்கு முன் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சத்ரூ பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் மூன்று பயங்கரவாதிகளும் ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.
- மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிக்கிமின் சத்தானில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.
பலத்த மழைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
உடனடி மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவுகள் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அசாமில் உள்ள பல முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.
அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.

இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக மாகாண செய்தித்தொடர்பாளர் ஜம்ஷித் சஹாபி தெரிவித்துள்ளார்.
இதேபோல், வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே வேளையில் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஒரே நாளில் இருவேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலிபான் உட்பட எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், அதனை பாதுகாப்பு படையினர் திறம்பட முறியடிப்படும் தொடர்கதைகளில் ஒன்றாகிவிட்டது. பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் சில சமயங்களில் வீர மரணம் அடைந்துள்ளனர். அதே சமயம் பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக போராடினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #MilitantsKilled #SecurityForce
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 1 பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Anantnag #JammuAndKashmir
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chhattisgarhattack #IEDblast #jawanskilled






