என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்
    X

    ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்

    • காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
    • பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) மோதல் ஏற்பட்டது.

    பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்ரூவின் குச்சல் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.

    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை பிடிக்க கூடுதல் படையினர் அனுப்பப்பட்டனர்.

    முன்னதாக உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் பகுதியின் தொலைதூர பிஹாலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒரு வாரத்திற்கு முன் கொல்லப்பட்டார்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சத்ரூ பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் மூன்று பயங்கரவாதிகளும் ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×