search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulgam"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை கண்டதும் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

    அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக இருக்கும் முக்தார் அஹ்மது மாலிக், விபத்தில் இறந்த தனது மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார். முக்தாரின் மகன் சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். #JammuKashmirAttack #KulgamPolicePostAttack

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்று போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #JammuKashmirAttack #KulgamPolicePostAttack
    ×